இந்திய ரூபாயின் மதிப்பு சர்வதேச பொருளாதார சந்தையில் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால், நகைக்கடைகளில் தங்க நாணயங்களின் விற்பனையை வரும் 20–ந்தேதி முதல் நிறுத்தி வைப்பதாக தமிழ்நாடு தங்கநகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் தங்கத்தின் மீது முதலீடு செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் இந்திய பொருளாதார சந்தை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு கடந்த மாதம் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 4 சதவீதத்திலிருந்து, 6 சதவீதமாக உயர்த்தியது. இந்தியாவில் விற்பனையாகும் நகைகளில் இருபது சதவீதம் தங்க நாணயங்களாக விற்பனை செய்யப்படுகின்றன. தங்க நாணயங்கள் விற்பனையை நிறுத்துவதன் மூலம் இந்தியாவில் இருபது சதவீதம் தங்கத்தின் மீதான இறக்குமதி குறையு வாய்ப்புள்ளதாக கூறிய நகை வியாபாரிகள் தமிழகத்தில் வரும் 20–ந்தேதி முதல் தங்க நாணயங்கள் விற்பனையை நிறுத்துவதாக அறிவித்துள்ளனர். மேலும் இந்த விற்பனை நிறுத்தம் ஆறு மாதங்கள் வரை நீடிக்கலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
|