LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

அமிர்தசரஸ் அருகே நடந்த கோர ரயில் விபத்து- நீதி விசாரணைக்கு பஞ்சாப் முதல்வர் உத்தரவு!

அமிர்தசரஸ் அருகே 61 பேர் பலியான கோர ரயில் விபத்து குறித்து நீதி விசாரணை நடத்த பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் உத்தரவிட்டு உள்ளார். 

தசரா விழாவை முன்னிட்டு, வட மாநிலங்களில்,  ராம்லீலா எனப்படும் ராவணன் உருவப் பொம்மை எரிப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் நகரில் உள்ள ஜோதா பதக் என்ற இடத்தில்,  இரவில் ராவணன் உருவப் பொம்மை எரிப்பு நிகழ்ச்சி நடந்தது. 

விழா நடந்த இடத்தின் அருகே ரயில் பாதை உள்ளது. மேடான இடத்தில் ரயில் பாதை அமைந்திருப்பதால், அங்கிருந்து ராவணன் உருவ பொம்மை எரிக்கும் நிகழ்ச்சியை பார்க்க 300க்கும் மேற்பட்டோர் கூடினர். அவர்கள் தண்டவாளத்தில் நின்று இருந்தனர்.

ராவணன் உருவப் பொம்மை எரிக்கப்பட்டதும் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அவை பல வண்ணங்களில், பயங்கர சத்தத்துடன் வெடித்துக் கொண்டிருந்தன.

 அதை தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த மக்கள் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தனர். அங்கிருந்து 2 கிமீ தூரத்தில் தான் அமிர்தசரஸ் ரயில் நிலையம் உள்ளது. அங்கிருந்து மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஹவுராவுக்கு புறப்பட்ட ரயில், நிகழ்ச்சி நடந்த இடத்தை மெதுவாக கடந்து சென்றது.

 இதனால், அந்த பாதையில் நின்றிருந்த மக்கள் அருகில் உள்ள தண்டவாளங்களில் விலகி நின்றனர். ஆனால், இந்த ரயில் சென்ற அடுத்த அரை நிமிடத்தில், எதிர் திசையில் ஜலந்தரில் இருந்து அமிர்தசரஸ் நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று வேகமாக வந்தது. 

பட்டாசு சத்தத்தில் அந்த ரயிலின் சத்தத்தை மக்கள் யாரும் கவனிக்கவில்லை. அருகே வந்த பிறகுதான் மக்கள் சுதாரித்துக் கொண்டு ஓடினர். அதற்குள் அவர்கள் மீது ரயில் பயங்கரமாக மோதியபடியே சென்றது. இதனால், 61 பேர் அதே இடத்தில் உடல்கள் துண்டாகியும், நசுங்கியும் இறந்தனர், 72 பேர் படுகாயம் அடைந்து அலறினர். 

ஓரிரு நிமிடங்களில் பல உயிர்களை பலி வாங்கி விட்ட இந்த விபத்து, நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்தில் இறந்தவர்களுக்காக பஞ்சாபில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்பட்டது. அனைத்து அலுவலகங்களும், கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு இருந்தன.

இந்த நிலையில், இந்த விபத்து குறித்து நீதி விசாரணை நடத்த பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் உத்தரவிட்டு உள்ளார். விபத்து நடந்த இடத்தை ரயில்வே உயர் அதிகாரிகளும், மாநில அரசு அதிகாரிகளும் ஆய்வு செய்தனர். 

அமெரிக்கா  சென்றிருந்த ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல், தனது பயணத் திட்டங்களை ரத்து  செய்து விட்டு நாடு திரும்பினார்.  இந்த நிலையில், விபத்து குறித்து ரயில்வே  இணையமைச்சர் மனோஜ் சின்ஹா கூறியதாவது: 

‘‘ரயில்வே தவறு காரணமாக விபத்து  நடக்கவில்லை. விபத்துக்கு எங்கள் குறைபாடோ, ரயில் டிரைவரின் தவறோ காரணமல்ல.  அதனால், டிரைவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. எதிர்காலத்தில்  ரயில் பாதை அருகே நிகழ்ச்சிகள் நடத்துவதை மக்கள் தவிர்க்க வேண்டும். 

முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த சோகமான விபத்தை  தடுத்திருக்கலாம். இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட நிர்வாகம்தான் அனுமதி  அளிக்கிறது. விபத்து பற்றி ரயில்வே பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்தும்.’’

இவ்வாறு அவர் கூறினார்.

விபத்தை ஏற்படுத்திய ரயிலின் டிரைவரை பஞ்சாப் போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில், ‘எனக்கு கிரீன் சிக்னல் கொடுக்கப்பட்டு இருந்தது. அதனால், வழக்கமான வேகத்தில் ரயிலை ஓட்டி வந்தேன். தண்டவாளத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருப்பது பற்றி முன்கூட்டியே எனக்கு எந்த தகவலும் தெரியாது’’ என்றார்.

by Mani Bharathi   on 21 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.