அரசு அலுவலகங்களில் பணம் செலுத்துதல், பதிவு செய்தல் உள்ளிட்ட பல சேவைகளுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் குறுந்தகவல் அனுப்பும் புதிய திட்டம் விரைவில் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அரசு சேவைகளுக்கான இந்த எஸ்.எம்.எஸ் குறுந்தகவல்கள் அதிகாரப்பூர்வ ஆவணமாகவும் கருதப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய எஸ்.எம்.எஸ் திட்டம், தகவல் அறியும் உரிமை சட்டம், சுகாதாரம், ஆதார், கல்வி, டைரக்டரி சர்வீஸ் ஆகிய துறைகளில், முதல் கட்டமாக அமல்படுத்தப்பட உள்ளது. விரைவில் இது, 100க்கும் மேற்பட்ட மத்திய அரசின் துறைகளில் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு "மொபைல் சேவா' என்று பெயரிடப்பட்டுள்ளது.
|