|
|||||
நாங்கள் காய்கறி கடை நடத்தவில்லை !! கவர்மென்டுதான் நடத்துறோம் !! கபில் சிபல் !!! |
|||||
வெங்காயத்தை அரசு விற்பதில்லை எனவும், வெங்காயம் விலை உயர்வு குறித்து, அதனை விற்பனை செய்யும் கடைக்காரர்களிடம்தான் கேட்கவேண்டும் என மத்திய அமைச்சர் கபில் சிபல் பொறுப்பற்ற பதில் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் வெங்காயம் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கிலோ 60 முதல் 70 ரூபாய் வரையிலும், டெல்லியில் 80 ரூபாய்க்கும் அதிகமாகவும் விற்பனையாகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.
இந்நிலையில் மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் கபில் சிபலிடம், செய்தியாளர்கள் நேற்று, வெங்காய விலை மேலும் உயருமா? எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர்," இதனை ஏன் நீங்கள் வியாபாரிகளிடம் கேட்கக்கூடாது? அரசாங்கம் வெங்காயத்தை விற்பனை செய்வதில்லை" என நக்கலாக பதிலளித்தார்.
இவரது பேச்சுக்கு மருந்து தடவும் விதமாக, வெங்காயத்தை வியாபாரிகள் பதுக்கி வைத்திருப்பதால்தான், விலை உயர்வுக்கு காரணமா? என்பது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாநில அரசுகளையும், மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் கேட்டுள்ளதாக மத்திய உணவுத் துறை அமைச்சர் கே.வி. தாமஸ் கூறியுள்ளார். மேலும் விலை உயர்வுக்கு ஏற்றுமதியும் ஒரு முக்கிய காரணமாக கூறப்படுவதால், வெங்காய ஏற்றுமதியை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள வெங்காயம் சந்தைகளுக்கு வரத்தொடங்கி உள்ளதாகவும், இந்த மாத இறுதிக்குள் வெங்காய விலை சீராகிவிடும் என்றும் தாமஸ் தெரிவித்துள்ளார்.
|
|||||
by Swathi on 19 Sep 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|