ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளை பணியிடைநீக்கம் செய்வது, பணியிடமாற்றம் செய்வது தொடர்பான விதிகளை மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மணல் கொள்ளையை தடுத்தற்காக உத்தரப் பிரதேசத்தில் பெண் ஐஏஎஸ் அதிகாரி துர்கா சக்தி நாக்பால், பணியிடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பணியாளர் துறை வட்டரங்கள் கூறியதுதாவது, நேர்மையாக பணியாற்றும், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சில மாநிலங்களில் அரசியல் மற்றும் சுய நலனுக்காக, சஸ்பெண்ட் செய்யப்படுகின்றனர் அல்லது பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர். சமீபகாலமாக, இது தொடர்பான புகார்கள் அதிகரித்துள்ளன.இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கான விதிமுறைகளை மாற்றம் செய்வது குறித்து, பரிசீலிக்கப்பட்டு வருகிறது. நேர்மையான அதிகாரிகள், எந்தவித நெருக்கடிக்கும் ஆளாகாமல், பணியாற்றுவதை உறுதி செய்யும் விதமாக, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த திருத்தம், நடைமுறைக்கு வந்தால், ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.எப்.எஸ்., அதிகாரிகளுக்கும், இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
|