கடந்த 1993 ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் பஞ்சாப்பை சேர்ந்த காலிஸ்தான் தீவிரவாதி சுசில்குமார் புல்லருக்கு கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்தது, இதற்கு பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பல்வேறு சமூக நல அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அடுத்து பஞ்சாப்பின் சட்ட ஒழுங்கை காக்கும் பொருட்டு புல்லரின் தூக்கு தண்டனையை குறைக்க வேண்டும் என பஞ்சாப் முதல்வர் பிரதமரிடம் நேரில் சந்தித்து வலியுறுத்தினார். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகவும் விரைவில் புல்லரின் தண்டனை குறைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
|