ஆசிட் விற்பனையை முறைப்படுத்த ஆசிடை விஷ பொருட்களின் பட்டியிலில் சேர்ப்பது பற்றி பரிசீலிக்கப்பட்டு வருவதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்ட லஷ்மி என்ற பெண் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில், ஆசிட் விற்பனையை முறைப்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட கோரியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையிலான பெஞ்ச் இதுதொடர்பாக 16ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். நேற்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆசிட் விற்பனையை கட்டுப்படுத்த ஆசிடை விஷப் பொருட்கள் பட்டியலில் சேர்க்கப்படும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கடைகளில் ஆசிட் விற்பனை செய்வோர் உரிமம் வைத்திருப்பதும் வாங்குவோர் அடையாள அட்டை வைத்திருப்பதும் கட்டாயமாக்கப்படும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
|