|
|||||
மாற்றம் வருமா மருத்துவத்துறையில் |
|||||
மாற்றம் வருமா மருத்துவத்துறையில் - சூர்யா சரவணன் மருத்துவர்கள் கையெழுத்தும் மருத்துவ சிகிச்சை முறைகளும் பொதுவாக புரியாத புதிராகவே உள்ளது. சாதாரண காய்ச்சலுக்கு ரத்தம் பிளட், யூரின் உள்ளிட்ட டெஸ்ட்டுகள் எடுத்து ரூ 50,000 வரை செலவுவைக்கும் மருத்துவமனை ஒரு புறம். வெறும் ஊசி, ஒரே ஒரு மாத்திரையில் குணப்படுத்தும் சாதாரண கிராம மருத்துவர்கள் என மருத்துவ சிகிச்சை ஒரு புறம். மருத்துவப்படிப்பு ஒரே மாதிரியாகத்தானே இருக்கிறது ஏன் மருத்த்வர்கள் மட்டும் மாறுபட்ட சிகிச்சை அளிக்கின்றனர். நோயுடன் அவசரத்தில் வருபவர்களை பணம் பிடுங்கும் நோக்கத்தில் செயல்படும் மருத்துவர்கள் தான் அதிகம். மத்திய சுகாதார அமைச்சகம் எய்ட்ஸ், டெங்கு காய்ச்சல், போலியோ போன்றவைகுறித்து அதிக செலவிடுகிறதே தவிர மருத்துவத்துறையை கட்டுப்பாட்டுக்குள் வைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது மிகவும் வருத்தத்திற்குறிய விஷயம். இதநாள் மருத்துவர்கள் அடிக்கும் கொள்ளை ஏராளம் குறிப்பாக பைல்ஸ் முதல் லாஜ் வைத்தியர்கள் வரை மக்களை மிகவும் சுலபமாக ஏமாற்றி பணம் பிடுங்குகின்றனர். கொஞ்சம் கூட ஈவு இரக்கமின்றி மக்களிடம் பணம் பிடுங்குவது காலாவதியான மருந்துக்கள் விற்பது என்பது பல கொடுமைகள் அறங்கேரியுள்ளன. இதை தடுக்க அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அத்தனை கொடுமைகளுக்குப்பின் மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இது காலதாமதமாக வெளியிடப்பட்டாலும் கூட வரவேற்கத்தக்கது.
மத்திய சுகாதார அமைச்சகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
1.சிகிச்சை அளிப்பதில் வெளிப்படையான நிலையை தனியார் மருத்துவமனைகள் மேற்கொள்ளவேண்டும்.
2.மருத்துவத்துறையை வர்த்தக துறையாக்காமல், சேவைத்துறையாக தொடரவேண்டும்.
3. அதிக கட்டணம் வசூலித்தல், தேவையற்ற சிகிச்சை முறைகள், பரிசோதனைகள் எடுக்க கட்டாயப்படுத்துதல் கூடாது.
4. பைபாஸ் அறுவை சிகிச்சை போன்ற முக்கிய சிகிச்சையின்போது நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்துக்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கக்கூடாது.
5.ஒவ்வொரு தனியார் மருத்துவமனையிலும் தங்கள் மருத்துவமனையில் உள்ள வசதிகள், எந்த நோய்க்கு என்ன வகை சிகிச்சை, அதற்கு எடுக்கவேண்டிய பரிசோதனைகள், அதற்கான கட்டணம் போன்றாவற்றை நோயாளிகள் பார்வையில் படும்படி எழுதிவைக்க வேண்டும்.
6. ஹார்ட் அட்டாக், வலிப்பு போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் தனியார் மருத்துவமனைகளில் ஒரே மாதிரியாக கட்டணமும் சிகிச்சையும் இருத்தல் வேண்டும்.
7. தேவையற்ற பரிசோதனைகள் கூடாது. உதாரணத்துக்கு மார்புவலி என்று ஒரு நோயால் வந்தால் அவருக்கு ஆஞ்சியோ கிராபி சோதனையைக் கட்டாயப்படுத்துகின்றன. மார்பு வலிக்கு ஆரம்பத்திலேயே ஆஞ்சியோகிராபி தேவையில்லை. இதுபோல பலவியாதிகளுக்கு தேவையற்ற பரிசோதனைகளை செய்ய வைத்து ஏற்கனவே உடல் நலக்குறைவால் மன சஞ்சலம் அடைந்திருக்கும் நோயாளிகளுக்கு பணக்கஷ்டத்தை ஏற்படுத்தக்கூடாது.
8. குழந்தையின்மை, கருத்தரியாமை, சில ரகசிய வியாதிகள் போன்றவற்றில் மருத்துவமனைகள் தேவையற்ற பல சோதனைகளை நடத்துவது தவிர்க்கப்பட வேண்டும். பெண்களுக்கான சிகிக்சை முறைகளில் அதிகளவில் கட்டணங்கள் வசூலிக்கப்படும் நிலையும் தவிர்க்கப்பட வேண்டும்.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த சுற்றரிக்கை நடைமுறைக்கு வந்தால் ஏழை, எளிய மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். என்பது மறுப்பதற்கில்லை.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் பலி
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே ஊரணி புரத்தை செர்ந்தவன் சபரிநாதன். இவன், அங்குள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்துவந்தான். சபரிநாதன், கடந்த சில நாட்களாக காய்ச்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தான். இந்நிலையில் நேற்று காலை சபரிநாதன் பரிதாபமாக இறந்தான். சுகாதரா சீர்கேடுதான் உயிரிழப்புக்கு காரணம் என்று கூறி சபரிநாதனின் பெற்றோர் உட்பட அப்பகுதி மக்கள் இன்று திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மருத்துவர்கள் கையெழுத்தும் மருத்துவ சிகிச்சை முறைகளும் பொதுவாக புரியாத புதிராகவே உள்ளது. சாதாரண காய்ச்சலுக்கு ரத்தம் பிளட், யூரின் உள்ளிட்ட டெஸ்ட்டுகள் எடுத்து ரூ 50,000 வரை செலவுவைக்கும் மருத்துவமனை ஒரு புறம். வெறும் ஊசி, ஒரே ஒரு மாத்திரையில் குணப்படுத்தும் சாதாரண கிராம மருத்துவர்கள் என மருத்துவ சிகிச்சை ஒரு புறம். மருத்துவப்படிப்பு ஒரே மாதிரியாகத்தானே இருக்கிறது ஏன் மருத்த்வர்கள் மட்டும் மாறுபட்ட சிகிச்சை அளிக்கின்றனர். நோயுடன் அவசரத்தில் வருபவர்களை பணம் பிடுங்கும் நோக்கத்தில் செயல்படும் மருத்துவர்கள் தான் அதிகம். மத்திய சுகாதார அமைச்சகம் எய்ட்ஸ், டெங்கு காய்ச்சல், போலியோ போன்றவைகுறித்து அதிக செலவிடுகிறதே தவிர மருத்துவத்துறையை கட்டுப்பாட்டுக்குள் வைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது மிகவும் வருத்தத்திற்குறிய விஷயம். இதநாள் மருத்துவர்கள் அடிக்கும் கொள்ளை ஏராளம் குறிப்பாக பைல்ஸ் முதல் லாஜ் வைத்தியர்கள் வரை மக்களை மிகவும் சுலபமாக ஏமாற்றி பணம் பிடுங்குகின்றனர். கொஞ்சம் கூட ஈவு இரக்கமின்றி மக்களிடம் பணம் பிடுங்குவது காலாவதியான மருந்துக்கள் விற்பது என்பது பல கொடுமைகள் அறங்கேரியுள்ளன. இதை தடுக்க அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் பலி |
|||||
by Swathi on 18 Oct 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|