பெட்ரோல் மற்றும் டீசல் இறக்குமதியை கட்டுப்படுத்தும் பொருட்டு, பெட்ரோல் பங்குகளை, இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை மூடுவது குறித்து பரிசீலித்து வருவதாக, மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். இது குறித்து பெங்களூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் வீரப்ப மொய்லி கூறியிருப்பதாவது, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடும் சரிவை சந்தித்து வருவதால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு, பெட்ரோலியப் பொருட்களின் விற்பனையில் புதிய கட்டுப்பாடுகளை, வரும் 16-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. மேலும், பெட்ரோல் பயன்பாட்டில் பொதுமக்கள் சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும் வீரப்ப மொய்லி கேட்டுக் கொண்டுள்ளார்.
|