தேவையானவை :
கொள்ளு - 2 கப் அரிசி - 1/4 கப் காய்ந்த மிளகாய் - 5 உப்பு, எண்ணெய் - தேவையான அளவு எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் கடுகு - 1/4 டேபிள் ஸ்பூன் சீரகம் - 1/4 டேபிள் ஸ்பூன் சோம்பு - 1/4 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் வெங்காயம் - 1/2 பொடியாக நறுக்கியது இஞ்சி - பொடியாக நறுக்கியது சிறிய துண்டு பெருங்காயம் - சிறிதளவு
செய்முறை :
1.கொள்ளு , அரிசியினை தனி தனியாக நான்கு மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்.கொள்ளுவை கற்கள் இல்லாமல் நன்றாக களைந்து கொள்ளவும்.
2.ஊறவைத்த பொருட்களை நன்றாக கழுவி அத்துடன் காய்ந்த மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். இத்துடன் தேவையான அளவு உப்பு , தண்ணீர் சேர்த்து கலந்து வைத்து கொள்ளுங்கள் .
3.தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றின் பின் ஒன்றாக சேர்த்து தாளித்து மாவில் சேர்க்கவும்.பெருங்காயம் ,உப்பு சேர்த்து ருசி பார்க்கவும்.
4.தோசை கல்லினை காயவைத்து, மெல்லிய தோசைகளாக ஊற்றவும்.நல்லெண்ணெய் சேர்ப்பது நல்லது .
5. ஒருபுறம் நன்றாக வெந்த பிறகு, அடையினை திருப்பி போட்டு வேகவிடவும்.
6. சுவையான சத்தான கொள்ளு அடை ரெடி. இதனை தேங்காய் சட்னியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
|