தேவையானவை:
பச்சைமிளகாய் - 10 புளி - எலுமிச்சை அளவு பெருங்காயம் - சிறிது கடுகு-ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு,எண்ணைய் - தேவையானது கறிவேப்பிலை - சிறிதளவு வெல்லம் - ஒரு டேபிள்ஸ்பூன்(தேவைப்பட்டால் )
செய்முறை:
1.பச்சைமிளகாயை எண்ணைய் விட்டு வதக்கிகொள்ளவும். பெருங்காயம்,உப்பு இரண்டையும் சிறிது எண்ணைய் விட்டு வறுத்துக்கொள்ளவேண்டும்.சிறிது புலியையும் அதில் சேர்த்து கொள்ளவேண்டும் .
2.பச்சைமிளகாய்,உப்பு,பெருங்காயம்,புளி நான்கையும் சிறிது தண்ணீர் விட்டு விழுது போல் அரைக்கவேண்டும். வாணலியில் சிறிது எண்ணைய் விட்டு கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளித்து அரைத்த விழுதை சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.
3.வேண்டுபவர்கள் வெல்லத்தை சேர்க்கலாம். தோசை,இட்லி இவற்றிற்கு தொட்டுக்கொள்ளலாம்.இப்பொழுது பச்சை மிளகாய் ரெடி.
|