பசுமைத் தாயகம் எனும் பெயரைக் கொண்ட பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டு நிறுவனம், ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசனை அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நிறுவனமாகும்.
இந்நிறுவனத்தின் சார்பாக, இலங்கையின் மீது சர்வதேசப் போர்க்குற்ற விசாரணையை நடத்தவேண்டும் என்று கோரிக்கையைக் கொண்ட அறிக்கையை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்தும், கடந்த ஆண்டு ஐ.நா. மனித உரிமை ஆணையத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்குப் பிறகு இலங்கையில் நடைபெற்றுவருகின்ற மனித உரிமை மீறல்கள் குறித்தும் அந்த அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ளது.
மனித உரிமை ஆணையத்திலுள்ள அனைத்து உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் ஐ.நா. பொதுச்செயலரின் சார்பாக இந்த அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
ஈழத்தமிழர் நலனில் அக்கறை உள்ளதாகக் காட்டிக்கொள்ளும் மத்திய அரசும் இதே போன்ற தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டும் என்று பசுமைத்தாயகம் மற்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
|