LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

எள், கடலை தட்டுப்பாட்டால் எண்ணெய் விலை உயர்வு!

எள் மற்றும் கடலை தட்டுப்பாட்டால்விருதுநகர் மார்க்கெட்டில்  நல்லெண்ணெய் மற்றும் கடலை எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

பெரும்பாலான எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் விருதுநகரில் இருப்பதால் அங்குள்ள மார்க்கெட்டில் ஒவ்வொரு வாரமும் எண்ணெய் விலை நிர்ணயம் செய்யப்படும்.

இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாகவே எண்ணெய்  விலை கணிசமாக உயர்ந்து வருகின்றது. விருதுநகர் மார்க்கெட்டில் கடந்த மாதம் நல்லெண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.195 ஆக இருந்தது. ஆனால்  இந்த மாதம் 55 ரூபாய் உயர்ந்து ஒரு லிட்டரின் விலை ரூ.250 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல கடந்த மாதம் கடலை எண்ணெயின் விலை லிட்டருக்கு ரூ.123 ஆக இருந்தது. ஆனால் இந்த மாதம் 17 ரூபாய் உயர்ந்து லிட்டர் ரூ.140 ஆக விற்கப்படுகின்றது. பாமாயில் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் லிட்டருக்கு 69 ரூபாயாக  விற்கப்படுகிறது. 

தயாரிப்பு மூல பொருட்களான எள், மற்றும்  நிலக்கடலை ஆகியவற்றின் பற்றாக்குறையே இந்த விலை உயர்விற்கு காரணம் என எண்ணெய் உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். 

இந்த மூலப்பொருட்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், எள் மற்றும் நிலக்கடலையின் வரத்து குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இதே நிலை நீடித்தால் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளனர்.

by Mani Bharathi   on 25 Sep 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.