அடுத்த மாதம் 1 ம் தேதி நடக்க உள்ள குரூப் - 2 தேர்வுக்கான நுழைவு சீட்டு டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில், நேற்று வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் காலியாக உள்ள, சார் பதிவாளர், வணிக வரித்துறை உதவி அலுவலர், தொழிலாளர் நல ஆய்வாளர், இந்து அறநிலையத்துறை அலுவலர், வேலைவாய்ப்பு இளநிலை அலுவலர் உள்ளிட்ட பதவிகளில், காலியாக உள்ள, 1,060 பணியிடங்களை நிரப்ப, வரும் டிசம்பர் 1ல், போட்டித் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வை சுமார் 7.5 லட்சம் பேர் எழுத உள்ளனர். இவர்களுக்கான நுழைவு சீட்டு(ஹால் டிக்கெட்) தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in), நேற்று வெளியிடப்பட்டது. தேர்வர்கள், தங்களது பதிவு எண்களை பதிவு செய்து, நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
|