|
|||||
5,066 பணியிடங்களுக்கான குருப் 4 தேர்வு தேதி அறிவிப்பு ! |
|||||
தமிழகத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், பில்கலெக்டர், வரைவாளர், நில அளவர் என மொத்தம் 5 ஆயிரத்து -66 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு வரும் ஆகஸ்ட் 25-ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, காலி பணியிடங்கள் :
இளநிலை உதவியாளர் - 62, இளநிலை உதவியாளர் - 3469, தட்டச்சர் - 1738, சுருக்கெழுத்து தட்டச்சர் - 242, பில்கலெக்டர் - 19, வரைவாளர் - 30, நில அளவர் - 6
தேர்வு நடைபெறும் நாள் : ஆகஸ்ட் 25
விண்ணபிக்க கடைசி நாள் : ஜூன் - 14 முதல் ஜூலை 15 வரை.
கல்வி தகுதி : பத்தாம் வகுப்பு
விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை : விண்ணப்பம் மற்றும் தேர்வுக் கட்டணங்களை இந்தியன் வங்கிக் கிளைகள் மற்றும் அஞ்சலகங்களில், தேர்வுக்கு விண்ணப்பித்த இரண்டு நாள்களுக்குள் செலுத்திவிட வேண்டும். ஆன்லைன் மூலமாகவும் செலுத்தலாம்.
உதவிக்கு : 044-25332855, 044-25332833 மற்றும் கட்டணமில்லாத் தொலைபேசி எண் 1800 425 1002 |
|||||
by Swathi on 13 Jun 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|