குஜராத்தில் எந்த மாதிரியான வளர்ச்சியை மோடி ஏற்படுத்தியுள்ளார் என்பது அனைவருக்குமே தெரியும். சாதாரண மனிதர்களின் நலன்களை அடகு வைத்து, பெரும் தொழில் நிறுவனங்களுக்குதான் அங்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் தலித்துகளும், மலைவாழ் மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.அவரது குஜராத் பாணி வளர்ச்சி தேசிய அளவில் செல்லுபடியாகாது. எங்களது வளர்ச்சித் திட்டங்களை ஏற்றுக் கொள்பவர்களுடன் தான் நாங்கள் கூட்டணி அமைப்போம் என்று பிகார் தலைநகர் பாட்னாவில் கட்சி நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத் கூறினார்.
|