ஜோதிட இமயம் அபிராமி சேகர் – 99948 11158
குருப்பெயர்ச்சிப் பலன்கள் 2016
குருபகவான் துன்முகி வருஷம் ஆடி மாதம் 27ம் தேதி (11-8-2016) வியாழக்கிழமை இரவு சுமார் 9:27 மணியளவில் சிம்மராசியிலிருந்து கன்னிராசிக்கு “திருக்கணிதப்” பஞ்சாங்கப்படி பெயர்ச்சி ஆகிறார்.
அதே சமயம் தை மாதம் 24ம் தேதி 06-02-2017 அன்று அவர் வக்ரம் ஆகி 09-06-2017 வரை கன்னி ராசியிலியே நின்று பலன் அளிக்க உள்ளார்.
மேலும் இக்காலங்களில் சனிப்பெயர்ச்சியும் நடைபெற உள்ளது. 26.01.2017 வியாழக்கிழமை இரவு சுமார் 7:28 மணியளவில் விருச்சிக ராசிலிருந்து தனுசு ராசிக்கு சனி பெயர்ச்சி ஆகிறார்.
இத்துடன் ராகு சிம்ம ராசியிலும் கேது பகவான் கும்ப ராசியிலும் நின்று இக்காலங்களில் பலன் அளிக்க உள்ளார்கள்.
எனவே குருப்பெயர்ச்சி நடைபெறும் இக்காலங்களில் சனிப்பெயர்ச்சியும் நடைபெறுகிறது. இந்த 1 ஆண்டு குருப்பெயர்ச்சியில் குரு வக்ரம் பெற்றும் பலன் அளிக்க உள்ளார். இத்துடன் ராகு, கேது ஆகிய அத்தனை கிரகங்களையும் கருத்தில் கொண்டு இங்கு குருப்பெயர்ச்சி பலன்கள் கூறப்பட்டுள்ளது.
பொதுவாக ராசிபலன்கள் என்றாலே அவரவர் பிறந்த ஜென்ம ராசியின் அடிப்படையிலேயே பலன்கள் கூறப்படுவது பொதுவான ஒன்றாகும். ஆனால் இங்கு ஒவ்வொருவரும் பிறந்த லக்னத்தின் அடிப்படையில் குருப்பெயர்ச்சிப் பலன்கள் “திருக்கணிதப்படி” எப்படி இருக்கும் என்று இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
லக்னம் என்பது உயிர், ராசி என்பது உடல், உயிர் இல்லாமல் உடல் இயங்காது எனவே உயிரின் அடிப்படையிலேயே இங்கு பலன்கள் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொருவருடைய ஜாதகத்திலும் “ல” என்று எந்த ராசியில் குறிக்கப்பட்டுள்ளதோ அதுவே உங்கள் லக்னம் ஆகும். அது ஜாதகத்தில் எந்த ராசியில் உள்ளதோ அந்த ராசியின் பெயர் என்னவோ அதுவே உங்கள் லக்னம் ஆகும். அதன் அடிப்படையிலேயே பலன்கள் கூறப்பட்டுள்ளது.
“லக்னப்படி” குருப்பெயர்ச்சி என்பதும் “ராசிப்படி” குருப்பெயர்ச்சி என்பதும் பொதுவான ஒன்றாகும். இருப்பினும் உங்கள் லக்னம் எது என்று தெரிந்து அதன் அடிப்படையில் இந்தப் பலன்களைப் படிப்பது விசேஷமாகும்.
இங்கு ஒரு முக்கியமான விஷயத்தை கண்டிப்பாக குறிப்பிட்டே ஆக வேண்டும். அவரவர் பிறந்த நேரப்படி உள்ள ஜாதக கட்டத்தில் உள்ள கிரகத்தின் அடிப்படையிலேயே பலன்கள் நடைபெறும் என்பதை மறந்து விடுதல் கூடாது. அத்துடன் நடப்பு தசா புத்திகள் இவற்றையும் கணக்கில் கொண்டு அதன் அடிப்படையில் மட்டுமே முழுமையாகப் பலன்கள் நடைபெறும் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளல் வேண்டும்.
மேலும் நவக்கிரகங்களில் சுபக்கிரகம் குருவாவார். இவர் ஒரு ராசியில் சுமார் 1 ஆண்டு காலம் சஞ்சாரம் செய்யும் காலங்களில் அந்தந்த ஜாதகத்திற்குத் தக்கப்படி நற்பலன்களையோ அசுர பலன்களையோ அளிக்க வல்லவராவார்.
நற்பலன்களைக் கொடுக்கும் பொழுது அதனை அதிகரித்துக் கொடுக்கும் அவர் தீயபலன்கள் நடைபெறுவதை தடுத்தும் குறைத்தும் பலன் அளிப்பதால் அவர் நவக்கிரகங்களில் முதல் சுபக்கிரகமாக இருந்து அருள்பாளிக்கிறார்.
இக்காலங்களில் கனியும் பெயர்ச்சியாவதால் அவர் பங்குக்கு ஆண் பெண் இருபாலருக்கும் அளிக்க உள்ள சுப அசுப பலன்களையும் கணக்கில் கொண்டு ஒவ்வொரு லக்னகாரர்களுக்கும் என்னமாதிரியான பலன்கள் நடைபெறும் என்பதை ஒரு பொதுப்பாலன்களாக இங்கு குறிப்பிட்டுள்ளோம்.
எல்லோரும் எல்லாவளங்களும் நலங்களும் பெற்று வாழ்க்கையில் இன்புற்றிருக்க குருபகவானை வணங்குவோம் போற்றுவோம் துதிப்போம்.
மேஷ லக்னம்
ரிஷப லக்னம்
மிதுன லக்னம்
கடக லக்னம்
சிம்ம லக்னம்
கன்னி லக்னம்
துலாம் லக்னம்
விருச்சிகம் லக்னம்
தனுசு லக்னம்
மகர லக்னம்
கும்ப லக்னம்
மீன லக்னம்
|