LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம்

குருவைப் போற்றிய குருநாதர்

குருபக்தி என்பது மிகவும் முக்கியமானது . அது இப்போது குறைந்து வருவதை அறிவோம் . அதற்கு என்ன காரணம் என்பதை ஆராய்ந்தால் ஓர் அடிப்படை உண்மை புரியும் . முன்பெல்லாம் குருகுல வாசத்தில் குரு அமர்ந்திருப்பார் . மாணவர்கள் நின்று கொண்டு பாடம் கேட்பார்கள் . அதனால் மரியாதை இருந்தது . இப்போது கல்விக் கூடங்களில் ஆசிரியர் நின்று கொண்டிருக்கிறார் . மாணவர்கள் உட்கார்ந்து பாடம் கேட்கிறார்கள் . அதனால் மரியாதை போய்விட்டது . அதனால்தான் இப்படியொரு சம்பவம் நடந்தது . ஒரு மாணவர் தன்னுடைய ஆசிரியரை மதியச் சாப்பாட்டுக்குத் தன் வீட்டுக்கு வரும்படி அன்போடு அழைத்தார் . அதற்கு ஆசிரியர் காரணம் கேட்டார் . அதற்கு பையன் சொன்ன பதில் , வேறு ஒண்ணுமில்ல சரி எங்க அப்பா நேத்து ஒரு அல்சேஷன் நாய் வாங்கி வந்தார் . அந்நியர் வந்தால் கடிச்சுக் குதறும்னார் . அது உண்மையான்னு பாக்கத்தான் உங்களை கூப்பிடுகிறேன் .

பெருந்தலைவர் அரசியலில் பலருக்கு குருவாக இருந்தவர் . அரசியல் நுணுக்கங்களை அவரிடம் படித்தவர்கள் அநேகர் பேர் . அவருக்கே குருவாக இருந்தவர் தீரர் சத்தியமூர்த்தி . தன்னுடைய குருநாதரிடம் அளவில்லாத பக்தி கொண்டிருந்தார் பெருந்தலைவர் . எல்லா அரசியல் நுணுக்கங்களையும் ஒரு சீடனுக்கு உரிய பணிவோடு அவரிடமிருந்து அறிந்துகொண்டார் . அது போலவே காமராசர் காட்டும் அரசியல் சாதுர்யததைக் கண்டு வியந்து போனார் குருநாதர் . அதனால்தான் வாய்ப்பு வரும்போது தனக்குக் கிடைக்க வேண்டிய பதவியைக் கூட காமராசருக்கு விட்டுக் கொடுத்தார் சத்தியமூர்த்தி . 1940 ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவர் பதவிக்கு மிகுந்த போட்டியிருந்தது . சத்தியமூர்த்தி தான் போட்டியிலிருந்து விலகி காமராசரைத் தேர்தலில் நிற்க வைத்தார் . அதோடு மட்டுமல்ல . அவரது வெற்றிக்காக அரும்பாடுபட்டு உழைத்தார் . வெற்றியும் தேடித் தந்தார் . திருச்சியில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் வைத்து காமராசரை மக்களுக்கு அறிமுகப்படுத்திப் பேசும்போது சத்தியமூர்த்தி இவ்வாறு குறிப்பிட்டார் .

காமராசர் ஆர்வம் மிக்கவர் , சிறந்த தொண்டர் , ஆற்றல் மிகுந்தவர் . நேர்மையானவர் . ஒரு காலத்தில் இவர் சென்னைக் கோட்டையில் முதல்வராக அமரப்போகிறார் . 1954 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி தமிழ் வருட பிறப்பன்று சத்தியமூர்த்தியின் வாக்கு பலித்தது . தனது குருநாதரிடம் தான் கொண்டிருந்த பக்தியை மிகச் சரியாக வெளிக்காட்டினார் பெருந்தலைவர் . முதல்வராக பதவியேற்றதும் காந்தியடிகளின் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு நேராக சத்தியமூர்த்தியின் இல்லம் சென்றார் . அப்போது சத்தியமூர்த்தி இயற்கை எய்தியிருந்தார் . அவரது துணைவியாரிடம் ஆசி பெற்றுத் திரும்பினார் பெருந்தலைவர் .

குருபக்தி கொண்டவர்களும் குருஅருள் பெற்றவர்களும் உயர்வு பெறுவர் என்பதற்குப் பெருந்தலைவரின் வாழ்க்கையே சான்று .

by Swathi   on 02 Sep 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.