|
||||||||
ஞானக்குறள்-திருவருட்பால்-கண்ணாடி |
||||||||
3கண்ணாடி தன்னி லொளிபோ லுடம்பதனுள்
உண்ணாடி நின்ற வொளி. 231
3அஞ்சு புலனின் வழியறிந்தாற் பின்னைத்
துஞ்சுவ தில்லை உடம்பு. 232
3நாபி யகத்தே நலனுற நோக்கிடில்
சாவது மில்லை யுடம்பு. 233
3கண்டத் தளவிற் கடிய வொளிகாணில்
அண்டத்த ராகு முடம்பு. 234
3சந்திர னுள்ளே தழலுற நோக்கினால்
அந்தர மாகு முடம்பு. 235
3ஆர்க்குந் தெரியா வுருவந்தனை நோக்கில்
பார்க்கும் பரமா மவன். 236
3வண்ண மில்லாத வடிவை யறிந்தபின்
விண்ணவ ராகு முடம்பு. 237
3 நெற்றிக்கு நேரே நிறைந்த வொளிகாணில்
முற்று மழியா துடம்பு. 238
3மாதூ வெளியின் மனமொன்ற வைத்தபின்
போதக மாகு முடம்பு. 239
சுத்தமோ டொன்றி மனமு மிறந்தக்கால்
முற்று மழியா துடம்பு.
240
|
||||||||
by Swathi on 28 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|