|
||||||||
ஞானக்குறள்-திருவருட்பால்-தூயவொளி காண்டல் |
||||||||
தோன்றிய தெல்லாந் தொடக்கறுத்துத் தூய்வெளியாய்த்
தோன்றியக் காற்றூய வொளி. 181
தெளிவாய தேசவிளக் கொளியைக் காணில்
வெளியாய வீடதுவே யாம். 182
மின்போ லுருவ விளக்கொளிபோல் மேற்காணில்
முன்போல மூலம் புகும். 183
பளிங்கு வலம்புரி பானிகர்த்த தாகில்
துளங்கொளியாந் தூய நெறி. 184
சங்கு நிறம்போற் றவளவொளி காணில்
அங்கையி னெல்லியே யாகும். 185
துளங்கிய தூண்டா விளக்கொளி காணில்
விளங்கிய வீடாம் விரைந்து. 186
மின்மினி போன்ற விளக்காகத் தான்தோன்றில்
அன்னப் பறவையே யாம். 187
உள்ளொளி தோன்றி லுணரி லருளொளி
அவ்வொளி யாதி யொளி. 188
பரந்த விசும்பிற் பரந்த வொளிகாணில்
பரம்பரமே யாய வொளி. 189
ஆதியொளியாகி யாள்வானுந் தானாகி
ஆதி யவனுருவு மாம்.
190
தோன்றிய தெல்லாந் தொடக்கறுத்துத் தூய்வெளியாய்த்தோன்றியக் காற்றூய வொளி. 181 |
||||||||
by Swathi on 28 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|