|
|||||
தொடர் மழையால் சிவகாசியில் பட்டாசு ஆலைகளுக்கு விடுமுறை விடப்பட்டதால், 5 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. |
|||||
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் 800 க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. இவை மூலம் 5 லட்சம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இந்த தொழிலை சார்ந்து அச்சு, அட்டைப்பெட்டி தயாரித்தல், குழாய் டியூப், கெமிக்கல், பேக்கேஜிங் உள்ளிட்ட தொழில்களும் உள்ளன. தீபாவளி பண்டிகையையொட்டி ஆலைகளில் பட்டாசு தயாரிப்பு பணி மும்முரமாக நடந்து வந்தது. கடந்த சில தினங்களாக சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் தொடர்மழை பெய்து வருவதால், ஆலைகளில் பட்டாசு தயாரிப்பு பணி பாதிக்கப்பட்டு உள்ளது. தீபாவளி ஆர்டர்கள் அதிகமாக உள்ள நிலையில், உற்பத்திப் பணி பாதிக்கப்பட்டு உள்ளதால், பட்டாசுகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. மேலும், 5 லட்சம் தொழிலாளர்களும் வேலையின்றி தவித்து வருகின்றனர். பட்டாசு தயாரிப்பு நிறுவன உரிமையாளர் ஒருவர் கூறியதாவது: ‘‘ஆலைகளில் பட்டாசு அதிகமாக தயாரித்தபோது, உச்சநீதிமன்ற வழக்கு காரணமாக வடமாநிலங்களில் இருந்து போதிய ஆர்டர் கிடைக்கவில்லை. தொழிலாளர்களுக்கு சம்பளம் கூட போட முடியாமல் அவதிப்பட்டோம். தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி டெல்லி உள்பட பல மாநிலங்களில் இருந்தும் ஆர்டர்கள் அதிக அளவில் வந்துள்ளன. ஆனால், மழை காரணமாக பட்டாசு தயாரிப்பு பணி பாதிக்கப்பட்டு உள்ளது. ஆலைகளுக்கு விடுமுறை அளித்துள்ளதால் தொழிலாளர்களுக்கும் வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. சீசன் நேரத்தில் உற்பத்தி பணி பாதிக்கப்படுவதால், ஆலை உரிமையாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும்."இவ்வாறு அவர் கூறினார். |
|||||
by Mani Bharathi on 13 Oct 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|