தலை வலி நிவாரணியாக பயன்படுத்தப்படும் அனால்ஜின் உட்பட, மூன்று மருந்துகளின் விற்பனைக்கு மத்திய சுகாதார அமைச்சகம் தடை விதித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தலைவலி மற்றும் உடல் வலிக்காக உட்கொள்ளப்படும் அனால்ஜின், நீரிழிவு நோயாளிகளுக்கு வழங்கப்படும் பயோக்லிடாசோன் மற்றும் மன அழுத்த நோய்க்கான டீன்சிக்ட் போன்ற மருந்துகள் உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பதோடு மட்டுமல்லாமல் பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாக வந்த புகார்களை அடுத்து இந்த மூன்று மருதுகளையும் தடைவிதிப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தடை உடனடியாக அமலுக்கும் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று மருந்துகளும் பல்வேறு நாடுகளில் பல ஆண்டுகளுக்கு முன்னரே தடைசெய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
|