நாமக்கல் அருகில்உள்ள மல்லசமுத்திரத்தில் கனமழை காரணமாக ஏரிகள் நிரம்பி 20 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகேயுள்ள மல்லசமுத்திரத்தில், இடி மின்னலுடன் பெய்த கனமழையால் செண்பகமாதேவி மற்றும் மங்களம் ஏரிகள் நிரம்பி வழிந்தன. ஏரியில் இருந்து வெளியேறிய நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.
கருப்பனார் கோயில் வீதியில் உள்ள தாழ்வான பகுதியில் மழைநீர் புகுந்து வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதில் சுமார் 20 வீடுகள் பாதிக்கப்பட்டன.
இந்த திடீர் மழையால் ஏரிகள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நடப்பு பருவத்தில் அங்கு நிலக்கடலை பயிரிட, இந்த மழை உதவியாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
|