இன்றைய சூழ்நிலையில் 13 வயதுக்குட்பட்ட இளம் சிறார்களே பாலியல் குற்றங்களில் ஈடுபடுவது அதிகரித்து வருவதால், இதனை தடுக்க பல்வேறு சமூக அமைப்புகளும், அரசும் பலவகைகளில் போராடி வருகின்றன. இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஒன்றான, "பேஸ்புக்' வலைதளத்தில், 13 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் கணக்கு தொடங்குவதை தடைசெய்ய வேண்டி, டில்லி ஐகோர்ட்டில், பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, பி.டி.அகமது மற்றும் நீதிபதி, விபு பக்ரு ஆகியோர், 13 வயதுக்குட்பட்டவர்கள், "பேஸ்புக்'கில் கணக்கு துவங்க தடை விதித்தனர். இந்த எச்சரிக்கை, "பேஸ்புக்" வலைதளத்தின் முகப்பு பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
|