இங்கிலாந்தில், அமெரிக்கா முன்னாள் அமைச்சர் ஹிலாரி கிளின்டனுக்கு, கார் பார்கிங் கட்டணம் செலுத்தாததால், அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் கடந்த வாரம், புனித ஜேம்ஸ் சதுக்கத்திற்கு அருகில், சிறப்பு கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள புனித ஜேம்ஸ் சதுக்கதிற்கு வந்த அமெரிக்கா முன்னால் அமைச்சர், ஹிலாரி கிளிண்டன், தனது காரை அரங்கத்திற்கு வெளியே நிறுத்திவிட்டு, காருக்கான, "பார்க்கிங்' டிக்கெட் வாங்க, மறந்துவிட்டார். அங்கு பணியில் இருந்த பாதுகாப்பு ஊழியரிடம், 300 ரூபாய்க்கு, அவர், பார்க்கிங் டிக்கெட் வாங்கியிருக்க வேண்டும். அரசியல் முக்கியத்துவத்துக்கான அடையாளம் மற்றும் நம்பர் பிளேட்டும் அவரது காரில் இல்லை. இதையடுத்து, 45 நிமிடங்கள் நிறுத்தப்பட்ட ஹிலாரியின் காருக்கு, லண்டன் நகர போக்குவரத்துத் துறை வார்டன், 4,000 ரூபாய் அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
|