|
||||||||
ஆடிப்பெருக்கு |
||||||||
ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் தமிழக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதைக் குறிக்கும். இதனை பதினெட்டாம் பெருக்கு என்றும்
கூறுவார்கள். தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே
ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர். இதனால் உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர். இப்பொழுது நெல், கரும்பு
முதலியவற்றை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அருவடை செய்ய முடியும். அதற்கு வற்றா நதிகளை தங்கள் கடவுளாக போற்றி மகிழ்ந்து,
பூசைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள். இதனையொட்டியே ஆடிப்பட்டம் தேடிவிதை என்ற பழமொழியும் விளைந்தது.
மக்கள் ஆற்றங்கரைகளில் கூடி ஆற்றுப் பெருக்கைக் கண்டு களிப்பர். இந்து சமயத்தவர் கோயில்களில் சென்று வழிபடவும் செய்வர். அன்றைய நாள்
பெண்கள் ஆற்றில் குளித்து ஆற்றங்கரையில் ஒவ்வொருவரும் பூஜை செய்ய ஒரு இடத்தைப் பிடித்துக் கொள்கின்றனர். அந்த இடத்தை சுத்தம் செய்து,
பசு சாணத்தால் மெழுகி அதன் மேல் வாழை இலையை விரித்து, பிள்ளையார் சிலை வைத்து அதன் முன் அகல்விளக்கு ஏற்றி வைக்கின்றனர்.
வழிபாட்டில் வெற்றிலை, பாக்கு, பழம் படைத்து, பத்தி, கற்பூரம் காட்டி, தடங்கல் இல்லாத விளைச்சலுக்கு விநாயகரை வழிபடுகின்றனர். ஆற்றினை
வழிபட்டு வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள்.கன்னிப்பெண்கள் தங்களுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டி சிறப்பு
பூஜைகள் செய்து கைகளில் மஞ்சள் கயிறுகளை கட்டிக்கொண்டார்கள்.வீடுகளில் விரதமிருந்து பெண்கள், முளைப்பாரியைகைகளில் ஏந்திக் கொண்டு
காவிரி ஆற்றுக்கு வந்தார்கள். எல்லா வளமும் பெருக வேண்டும் என்றுஇளம்பெண்கள் பூஜை செய்து முளைப்பாரியை காவிரியில் விட்டுவிட்டு
கோவிலுக்கு சென்று வழிபட்டனர்.விவசாயம் செழிக்க வேண்டி விவசாயிகள் காவிரி அன்னைக்கு மலர் தூவி வணங்கினார்கள். மேட்டூர்,
ஒகேனக்கல்லில் ஏராளமான புதுமணத் தம்பதிகள் புனித நீராடியதோடு, மங்களகரமான பொருட்களோடு சிறப்பு வழிபாடு நடத்தினர்.
மரபு: "காவிரி என்ற பெண் ஆடியில் பெருக்கெடுத்து, சமுத்திர ராஜனான கடலை அடைகிறாள்' என்ற ஐதீகத்தின் அடிப்படையில், தங்களுக்கு வளங்களை
வழங்கும் காவிரிக்கு மங்கலப்பொருட்களை மக்கள் சீராக வழங்குவது, தொன்று தொட்டு மரபாக இருக்கிறது. திருச்சியை பொறுத்தவரை,
ஆடிப்பெருக்கன்று பரந்து விரிந்து கடல் போல கரை புரண்டோடும் காவிரியின் கரையோரங்களில் பெண்கள், காதோலை, கருகமணி, மஞ்சள், குங்குமம்
போன்ற மங்களப்பொருட்கள், பழங்கள் படைத்து ஆற்றில் விடுவர். சுமங்கலி பெண்களின் கைகளால் மஞ்சள் கயிற்றை ஆண், பெண் வேறுபாடு இன்றி
கட்டிக்கொள்வர். குறிப்பாக, புதுமணத் தம்பதிகள், "சீரும் சிறப்பாக வாழ வேண்டும்' என்று திருமண மாலைகளை ஆற்றில் விட்டு, காவிரியை
வணங்குவர்.
ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் தமிழக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதைக் குறிக்கும். இதனை பதினெட்டாம் பெருக்கு என்றும் கூறுவார்கள். தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர். இதனால் உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர். இப்பொழுது நெல், கரும்பு முதலியவற்றை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அருவடை செய்ய முடியும். அதற்கு வற்றா நதிகளை தங்கள் கடவுளாக போற்றி மகிழ்ந்து, பூசைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள்.
இதனையொட்டியே "ஆடிப்பட்டம் தேடிவிதை" என்ற பழமொழியும் விளைந்தது.
மக்கள் ஆற்றங்கரைகளில் கூடி ஆற்றுப் பெருக்கைக் கண்டு களிப்பர். இந்து சமயத்தவர் கோயில்களில் சென்று வழிபடவும் செய்வர். அன்றைய நாள் பெண்கள் ஆற்றில் குளித்து ஆற்றங்கரையில் ஒவ்வொருவரும் பூஜை செய்ய ஒரு இடத்தைப் பிடித்துக் கொள்கின்றனர். அந்த இடத்தை சுத்தம் செய்து, பசு சாணத்தால் மெழுகி அதன் மேல் வாழை இலையை விரித்து, பிள்ளையார் சிலை வைத்து அதன் முன் அகல்விளக்கு ஏற்றி வைக்கின்றனர். வழிபாட்டில் வெற்றிலை, பாக்கு, பழம் படைத்து, பத்தி, கற்பூரம் காட்டி, தடங்கல் இல்லாத விளைச்சலுக்கு விநாயகரை வழிபடுகின்றனர்.
ஆற்றினை வழிபட்டு வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள். கன்னிப்பெண்கள் தங்களுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டி சிறப்பு பூஜைகள் செய்து கைகளில் மஞ்சள் கயிறுகளை கட்டிக்கொண்டார்கள்.வீடுகளில் விரதமிருந்து பெண்கள், முளைப்பாரியைகைகளில் ஏந்திக் கொண்டு காவிரி ஆற்றுக்கு வந்தார்கள். எல்லா வளமும் பெருக வேண்டும் என்றுஇளம்பெண்கள் பூஜை செய்து முளைப்பாரியை காவிரியில் விட்டுவிட்டு கோவிலுக்கு சென்று வழிபட்டனர்.விவசாயம் செழிக்க வேண்டி விவசாயிகள் காவிரி அன்னைக்கு மலர் தூவி வணங்கினார்கள்.
மரபு:
"காவிரி என்ற பெண் ஆடியில் பெருக்கெடுத்து, சமுத்திர ராஜனான கடலை அடைகிறாள்' என்ற ஐதீகத்தின் அடிப்படையில், தங்களுக்கு வளங்களை வழங்கும் காவிரிக்கு மங்கலப்பொருட்களை மக்கள் சீராக வழங்குவது, தொன்று தொட்டு மரபாக இருக்கிறது. திருச்சியை பொறுத்தவரை, ஆடிப்பெருக்கன்று பரந்து விரிந்து கடல் போல கரை புரண்டோடும் காவிரியின் கரையோரங்களில் பெண்கள், காதோலை, கருகமணி, மஞ்சள், குங்குமம் போன்ற மங்களப்பொருட்கள், பழங்கள் படைத்து ஆற்றில் விடுவர். சுமங்கலி பெண்களின் கைகளால் மஞ்சள் கயிற்றை ஆண், பெண் வேறுபாடு இன்றி கட்டிக்கொள்வர். குறிப்பாக, புதுமணத் தம்பதிகள், "சீரும் சிறப்பாக வாழ வேண்டும்' என்று திருமண மாலைகளை ஆற்றில் விட்டு, காவிரியை வணங்குவர். |
||||||||
by Swathi on 09 Aug 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|