LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

சஞ்சய்தத்தின் தண்டனை குறைப்பது குறித்து மத்திய அரசு மகாராஷ்டிரா அரசுடன் ஆலோசனை !!!

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், சிறை தண்டனை அனுபவித்து வரும், பிரபல நடிகர் சஞ்சய்தத்தின் தண்டனை காலத்தை குறைப்பது குறித்து, மத்திய உள்துறை அமைச்சகம், மகாராஷ்டிரா அரசிடம் கருத்து கேட்டுள்ளது.

 

மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் 263 பேர் பலியாகினர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான இந்தி நடிகர் சஞ்சய்தத்துக்கு தடா நீதிமன்றம் 6 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் இறுதியாக 5 ஆண்டு சிறை தண்டனையாக குறைக்கப்பட்டது. மேலும் தண்டனையை மறுபரிசீலனை செய்யக் கோரி சஞ்சய்தத் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்திய பத்திரிகை கவுன்சிலின் தலைவர், மார்க்கண்டேய கட்ஜு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பிய மனுவில், 'சஞ்சய் தத் மற்றும் இரண்டு பேருக்கு, மனிதாபிமான அடிப்படையில் விடுதலைஅளிக்க வேண்டும்' என, கோரிக்கை வைத்தார். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம், நடிகர் சஞ்சய் தத்திற்கு தண்டனை காலத்தை குறைப்பது பற்றி, கருத்து தெரிவிக்கும்படி, மகாராஷ்டிரா மாநில அரசை கேட்டுள்ளது. மகாராஷ்டிரா அரசு பரிந்துரை அளித்த பின், உள்துறை அமைச்சகம், ஜனாதிபதிக்கு அறிக்கை ஒன்றை அளிக்க இருக்கிறது.

by Swathi   on 23 Oct 2013  0 Comments
Tags: மத்திய அரசு   மகாராஸ்டிரா   சஞ்சய் தத்   சிறை தண்டனை   Sanjay Dutt   Sentence   Sanjay Dutt Sentence  
 தொடர்புடையவை-Related Articles
திருவள்ளுவர் பிறந்த நாளை தேசிய விழாவாக கொண்டாட மத்திய அரசு முடிவு !! திருவள்ளுவர் பிறந்த நாளை தேசிய விழாவாக கொண்டாட மத்திய அரசு முடிவு !!
மத்திய அரசு துறையில் ஜி-மெயில், யாஹூ பயன்படுத்த தடை !! மத்திய அரசு துறையில் ஜி-மெயில், யாஹூ பயன்படுத்த தடை !!
சஞ்சய்தத்தின் தண்டனை குறைப்பது குறித்து மத்திய அரசு மகாராஷ்டிரா அரசுடன் ஆலோசனை !!! சஞ்சய்தத்தின் தண்டனை குறைப்பது குறித்து மத்திய அரசு மகாராஷ்டிரா அரசுடன் ஆலோசனை !!!
ஓட்டுக்கு பணம் வாங்கினால் ஒரு வருட சிறை !! ஓட்டுக்கு பணம் வாங்கினால் ஒரு வருட சிறை !!
தமிழக மீனவர்களை காக்க இலங்கை அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள மத்திய அரசு முடிவு !!! தமிழக மீனவர்களை காக்க இலங்கை அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள மத்திய அரசு முடிவு !!!
இலங்கை அகதிகள் குடியுரிமை : மத்திய அரசுக்கு உயர்நீதி மன்றம் நோட்டீஸ் !!! இலங்கை அகதிகள் குடியுரிமை : மத்திய அரசுக்கு உயர்நீதி மன்றம் நோட்டீஸ் !!!
ஆதர் அட்டை பயன்பாடு - மத்திய அரசு விளக்கம் !! ஆதர் அட்டை பயன்பாடு - மத்திய அரசு விளக்கம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.