நாடாளமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில், புதிதாக வாக்காளர்களை சேர்க்கும் பணியை தேர்தல் ஆணையம் துவங்கியுள்ளது.
இது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தகுதியுள்ள நபர்கள் படிவம் 6 விண்ணப்பத்தை பெற்று, அதை பூர்த்தி செய்து, வட்டாட்சியர், நகராட்சி, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களிலோ, மாநகராட்சிக் பகுதிகளில் மண்டல அலுவலகங்களிலோ அளிக்கலாம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் விண்ணப்பத்துடன் இருப்பிட மற்றும் வயதுச் சான்றிதழ்களின் நகல்களை இணைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பெயர் மற்றும் விவரங்களில் திருத்தம் செய்பவர்கள் படிவம் 8 ஐயும், பெயர் நீக்கத்துக்கு படிவம் 7 ஐயும் பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விண்ணப்பங்களை http://www.elections.tn.gov.in/eregistration/ என்ற இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
|