LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    ஹெல்த் டிப்ஸ் -(Health Tips) Print Friendly and PDF
- ஆயுர்வேதம்

நோயயற்ற வாழ்வு வாழ்வது எப்படி?

மனிதன் ஆரோக்யத்துடன் வாழ மிகுந்த ஆசைப்படுகிறான். உடல் உபாதை தோன்றிவிட்டால் அதை சரி செய்து கொள்ள அவன்படும் பிரயத்னங்களில்தான் மனம் ஈடுபடுகிறது. ஆரோக்யம் மறுபடியும் திரும்பிவிட்டால் மனம் சாந்த நிலைக்குத் திரும்பிவிடுகிறது. சரகசம்ஹிதை எனம் ஆயுர்வேத நூலில் நோயற்ற வாழ்விற்கான குறிப்புகள் காணப்படுகின்றன."உடலுக்கும் மனதிற்கும் ஒத்துக்கொள்ளும் உணவையும் நடவடிக்கைகளையும் அமைத்துக் கொண்டவன், நிதானித்துச் செயலாற்றுபவன், பொறிகளால் உணரப்படும் பொருள்களில் நப்பாசை காரணமாக ஈடுபடாதவன், பிறருக்கு உதவுபவன், ஸமபாவனை கொண்டவன், உண்மையில் ஈடுபாடுள்ளவன், பொறுமை உள்ளவன், உண்மையான இதத்தைத் தயங்காமல் கூறி அதன்படி நடக்கத் தூண்டும் உயர்ந்த நண்பனைப் பின்பற்றுபவன் நோயற்றிருப்பான்" என்று குறிப்பிடுகிறார்.

இக்காலத்தில் மருத்துவர்களை தேர்ந்தெடுக்கும் திறமையும் அவசியமாகியுள்ளது. காரணம் அரசாங்கம் கடைபிடித்து வரும் சில சட்ட திட்டங்களால் நோயின் தன்மையை தன் கூர்மையான அறிவால் அறிந்து மருந்தைத் தரும் உயர்ந்த மருத்துவர்கள் குறைந்து விட்டனர். தவறான மருந்தால் மனிதன் இறந்துபோகும் சம்பவங்களை கேள்விப்படுகிறோம். சரக ஸம்ஹிதையில் இதைப் பற்றிய குறிப்பும் காணப்படுகிறது."மருந்தைப் பற்றியும் அதனைப் பயன்படுத்தும் முறையைப் பற்றியும் தீர அறியாமல் பயன்படுத்தினால் விஷமாகி அது உயிரை மாய்க்கும். கூரிய ஆயுதமாகி உடலை சிதைக்கும். நெருப்பாகி எரித்து விடும். இடியாகி நொடியில் சுருக்கி விடும். அதனையே அறிந்து முறையுடன் பயன்படுத்தினால் அமுதமாகி நீண்ட நாட்கள் வாழவைக்கும்".நோயின் ஆதிக்கம் அதிகரித்ததும் ஆஸ்பத்திரிக்கு சென்று படுத்துக் கொண்டு விடுகிறோம். வைத்யனும் தன் திறமையெல்லாம் காட்டி நோயை தீர்த்து ஆரோக்யத்தை மறுபடியும் கொண்டு வந்து வீட்டிற்கு அனுப்புகிறார். வீடு திரும்பும் அவன் நோயின் சீற்றத்தை மறக்காமல் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று சரகர் அபிப்பிராயப் படுகிறார்.

"வெள்ளம் வந்தது. பயிர் அழிந்தது. மறுபடி அவ்வாறு வெள்ளம் வரலாம். வெள்ளம் வருவதற்கான புறக்காரணங்களை தவிர்க்க முடியாமலாகலாம். அதற்காக முன்னதாக அணை கோலுவர். வெள்ளம் வந்த பின் அணையிட முடியாது. முன் நோய் வந்த அனுபவம் உள்ளது. மறுபடி அவ்வாறு நோய் வரலாம். நோய் வரக்கூடிய புறக்காணரங்களைத் தவிர்க்க முடியாமல் ஆகலாம். நோய் வருமிடமான உடலை வலுப்படுத்திக் கொள்வோம். நோய் பாதிப்பு அதிகமாகாமல் அணை கோலுவோம்.""திறமை வாய்ந்த வைத்யரைப் பற்றி அறிந்து அவரிடம் சென்று நோயாளி மருந்தை வாங்கியதும் நம்பிக்கை பெற்று மருந்தை சாப்பிட வேண்டும் என்று ஆயுர்வேதம் கீழ்காணும் விதம் கூறுகிறது."நோயாளியும் அவனுக்குப் பணிவிடை புரிவபவர்களும் மங்களமான நடத்தையுள்ளவர்கள். நோயாளி தைவ பக்தியும் வைத்யரிடம் நம்பிக்கையும் கொண்ட வைத்யர் சொல்படி இசைந்து சிரத்தையுடன் நடப்பவன் சிகித்ஸை பலிக்கும் என்ற திடமான எதிர்பார்வை, இவை அனைத்துமிருக்க ஆரோக்யம் எளிதில் கிட்டும்".

பத்யா ஆசரணைகளில் மனம் செல்லாமல் மருந்தை மட்டும் சாப்பிடுவதால் பயனேதுமில்லை. சில உணவு வகைகள் அதிக அளவில் சேர்ப்பதால் உடல் ஆரோக்யம் கெட்டு உடல் நலம் குன்றி விடும் என்று சரகர் குறிப்பிடுகிறார்."முறையற்று மனம்போனபடி உடலுக்கொவ்வாததை உண்பதும், புளிப்பும் உப்பும் உரைப்புத் அதிகமாகச் சேர்ந்ததும், அப்பளக்காரம் சோடா உப்பு போன்றவை அதிகம் சேர்ந்ததும், குளிரால் விரைத்தும், உலர்ந்ததும் சுவையற்றிருக்கும் கறிகாய்களும் புலாலும் சேர்ப்பதும், எள்ளும் எள்ளின் எண்ணெய்யும் இட்லி தோசை போன்ற மாவாலான பணியாரங்களும் உணவில் அதிக அளவில் தொடர்ந்து சேர்வதும் உடல் நலனைக் கெடுக்கும் எல்லா தோஷங்களையும் தோற்றுவிக்கும்."நோய்க்கும் துக்கத்திற்கும் காரணம் மனிதனின் சிந்தனையும் செயலும் வேண்டிய அளவில் இல்லாததால்தான் கையேந்தி பவனில் சாப்பிட்ட ஊசிப் போன பேல்பூரியால் ஏற்பட்ட வயிற்று வலியை மருந்தினால் சரி செய்து, பின்னர் ஒரு நாள் மறுபடியும் அதை ஒருவன் சாப்பிட்டால் அம்மனிதனை என்னவென்று சொல்வது. வாக்படாசார்யார் தன் ஆயுர்வேத உபதேசத்தில் குறிப்பிடுகிறார்.

"இரவு படுக்குமுன் சிறிது சிந்தனை தேவை. இன்று பகல் பொழுதைக் கழித்த விதம், நேற்றிரவைக் கழித்த விதம், இரண்டும் சிந்தனைக்குரியவை. நேரான முறையால் ஏற்பட்ட நன்மை, மனநிறைவு, சீர்கெட்ட முறையால் ஏற்பட்ட உடல் - மனப் பாதிப்பு, இரண்டின் பின் விளைவுகள் இவற்றைச் சீர்தூக்கிப் பார்த்து, அதன் அடிப்படையில் நாளது வாழ்க்கை முறையில் அமைத்துக் கொள்ள வேண்டியது. இவை அனைத்தையும் தினமும் சிந்திக்க வேண்டும். சிந்திப்பது செயலுடன் நெருங்கி இருக்கவேண்டும். செயல் சிந்தனையுடன் நெருங்கி இருக்க வேண்டும். இப்படி நினைப்பவன் துக்கமடைவதில்லை."

by Swathi   on 10 Dec 2012  0 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
முருங்கை இலையில் இவ்வளவு சத்து உள்ளதா? முருங்கை இலையில் இவ்வளவு சத்து உள்ளதா?
8 நடைப்பயிற்சி 8 நடைப்பயிற்சி
இருதயம் சீராக இயங்க இருதயம் சீராக இயங்க
சாப்பிடும் முறை... சாப்பிடும் முறை...
மருந்தகங்களில் கிடைக்காத மருந்துகள்* மருந்தகங்களில் கிடைக்காத மருந்துகள்*
முக்கிய மருத்துவக் குறிப்புகள் முக்கிய மருத்துவக் குறிப்புகள்
கிட்னி கல் கரைய  பூளைப்பூ வைத்தியம் கிட்னி கல் கரைய பூளைப்பூ வைத்தியம்
நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா? மாரடைப்புக்கு   சூடான குடிநீர் நல்லது நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா? மாரடைப்புக்கு சூடான குடிநீர் நல்லது
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.