LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    ஹெல்த் டிப்ஸ் -(Health Tips) Print Friendly and PDF

நாம் சத்துள்ள உணவு,சத்தில்லாத உணவு என்று எப்படி அறிவது?

உடலின் தன்மைகேற்ப உணவு சத்துள்ளதாகவும், சத்தில்லாததாகவும் மாறுகிறது.வாதப் பிரகிருதி, பித்தப் பிரகிருதி, கபப் பிரகிருதி என்று மூன்று விதங்களாக நமக்கு உடல் அமைகிறது. ஆரோக்கியநிலை, நோய் நிலை இரண்டிலும் பிரகிருதிக்குத் தனிப்பட்ட பத்தியங்களை உபயோகிக்க வேண்டும்.

வாதப் பிரகிருதி :

இந்த பிரதகிருதி உள்ளவருக்கு உடல் வறட்சி, தொட்டால் குளிர்ச்சி, சொரசொரப்பு, கல்லுக் குடல் வாகு.இதற்கு காரணம், துவர்ப்பு, கசப்புச் சுவை கொண்ட மிளகு, மிளகாய், பாகல், சுண்டைக்காய் முதலியவை அதிகமாக சேர்த்துகொள்வது. பொதுவாய் இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவை, பால், தயிர், வெண்ணெய், பலா, இனிப்பு மாதுளை, வாழை, மா, திராட்சைப் பழங்கள், அரிசி, கோதுமை, உளுந்து, குடலுக்கு எண்ணெய்ப் பசையைத் தரும் நெய் போன்றவை சத்துள்ள உணவாகும். அதிக உடற்பயிற்சி, புணர்ச்சி, இரவு கண்விழித்தல் போன்றவை அபத்தியம். மாமிசம், மீன், முட்டை நல்லதே.

பித்தப் பிரகிருதி :

பித்தப் பிரகிருதியில் உடல்சூடு, மிருதுவான குடல், செம்பட்டை முடி, நல்ல உடல்நிறம் கொண்டவராக இருப்பார். துவர்ப்பு, கசப்பு, இனிப்புச் சுவை கொண்ட காய்கறிகள், பழங்கள், கீரைகள் பத்தியம், புளிப்பு, காரம், உப்புச் சுவை அபத்தியம், மாதுளை, நெல்லிக்காய், வெல்லத்துடன் கலந்த எலுமிச்சைச் சாறு, கரும்புச் சாறு, கடைந்த புதிய மோர் ஆகியவை சத்துள்ள உணவாகும்.

சுப பிரகிருதி :

சுப பிரகிருதியில் உடல்குளிர்ச்சி, தோலில் எண்ணெய்ப் பசை அதிகம். உடல் வழவழப்பு, நல்ல குரல்வளம் கொண்டவராக இருப்பார். கப வியாதிகள் அதிகம் அடிக்கடி பீடிக்கும், சீக்கிரம் உடல் பருமனாகி விடும். கசப்பு, துவர்ப்பு, காரச்சுவையுள்ள காய்கறிகள் பத்தியம், நெய், வெண்ணெய், ஆடைத்தயிர், வெல்லம், கறும்புச்சாறு அபத்தியம் வெறும் வயிற்றில் ஆறிய தண்ணீரில் தேன்கலந்து குடிக்க உடல் இளைக்கும். பகல் தூக்கம் மிகக் கெடுதல், உணவில் கேழ்வரகு, சோளம், கம்பு, கொள்ளு, வரகு தானியங்கள் பத்தியம். அரிசி, கோதுமைகளை விட யவம் என்னும் வார் கோதுமை பத்தியம். இவை அனைத்தும் சத்தான உணவாகும். மாமிசத்தை மிதமாய் உண்ணலாம். மீன், முட்டையைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.ஆக, பிரகிருதிகளால்தான் உணவு சத்தாகிறது. அல்லது சத்தில்லாமல் போகிறது.

by Swathi   on 10 Dec 2012  0 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
முருங்கை இலையில் இவ்வளவு சத்து உள்ளதா? முருங்கை இலையில் இவ்வளவு சத்து உள்ளதா?
8 நடைப்பயிற்சி 8 நடைப்பயிற்சி
இருதயம் சீராக இயங்க இருதயம் சீராக இயங்க
சாப்பிடும் முறை... சாப்பிடும் முறை...
மருந்தகங்களில் கிடைக்காத மருந்துகள்* மருந்தகங்களில் கிடைக்காத மருந்துகள்*
முக்கிய மருத்துவக் குறிப்புகள் முக்கிய மருத்துவக் குறிப்புகள்
கிட்னி கல் கரைய  பூளைப்பூ வைத்தியம் கிட்னி கல் கரைய பூளைப்பூ வைத்தியம்
நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா? மாரடைப்புக்கு   சூடான குடிநீர் நல்லது நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா? மாரடைப்புக்கு சூடான குடிநீர் நல்லது
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.