LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் இலக்கணம் (Tamil Grammar )

புணர்ச்சி விதிகள் பற்றிக் கற்பதற்கு ஏதாவது வழியுண்டா..?

உதாரணமாக பெற்றுக்கொண்டேன் அல்லது பெற்றுக் கொண்டேன் - மலையக மக்கள் அல்லது மலையகமக்கள் என இணைந்தோ சேர்ந்தோ எழுதுவதற்கு இலக்கண விதி என்ன..?

மகுடேசுவரன் :

வினையெச்சம் எனப்படும் முற்றுப்பெறாத வினைச்சொல்லை அடுத்து ஒரு வினைச்சொல் வரும் அல்லது ஒரு பெயர்ச் சொல் வரும்.

பெற்று என்பதில் வினைச் சொல்லே அடுத்து வரும்.
பெற்ற என்பதில் பெயர்ச்சொல்லே அடுத்து வரும்.
உதா: பெற்றுக்கொண்டேன். பெற்ற செல்வம்.

வினையெச்சத்தை அடுத்து வினைச்சொல் வருகையில் ஒற்றுமிகும். பெற்றுக்கொண்டேன். சுற்றிப் பார்த்தேன்.

எச்சத்தை அடுத்து பெயர்ச்சொல் வந்தால் ஒற்று மிகாது. பெற்ற செல்வம். கற்ற கல்வி.

அடுத்து இரண்டு பெயர்ச்சொற்களின் ஒற்றுமிகுதல் குறித்து. அது பொருள் வேறுபாடு கருதி ஒற்றை மிகுவிக்க அல்லது தவிர்க்க வேண்டும்.

உதாரணத்திற்கு. தினமணிகதிர், தினமணிக்கதிர். இந்த இரண்டுமே சரிதான். ஆனால் பொருள் வேறுபடும்.

தினமணி கதிர் என்றால் தினமணியும் கதிரும் என்று உம்மைத் தொகையாகும். உம்மைத் தொகை என்றால் எல்லாச் சொற்களும் கடைசியில் உம் உம் என்று சேர்த்துப் பொருள் விரித்துப் பெறுவது. தினமணி தனி அதோடு இணைந்து வருகிற புத்தகமான கதிர் என்பதும் தனிதானே ? அதனால் தினமணி கதிர் என்பது பொருளடிப்படையில், இவ்வாறே பொருள் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் சரி.

தினமணிக்கதிர் என்றால் தினமணியின் கதிர் என்ற பொருளில் வேற்றுமைத் தொகை எனவும் ஆகும். இன் என்கிற ஒரு வேற்றுமை உருவை ஒட்டவைத்துப் பொருள் விரித்துப் பெறுவதால் வேற்றுமைத் தொகை. தினமணி என்கிற நாளிதழின் இணைப்புப் புத்தகம் கதிர் என்பதால் இதுவும் சரிதான்.

நீங்கள் கேட்பது சொற்களுக்கு இடையில் இடைவெளி விடுவது குறித்து என்றால் பழந்தமிழில் இந்த இடைவெளிப் பழக்கம் இல்லை. சீர் பிரித்தல், அடி (வரி) பிரித்தல் என்பன சொல்லடிப்படையில் பிரிபட்டு நிற்கவில்லை. இது அச்சு வசதியும் உரையெழுதுவோரும் படிப்போரின் நன்மை கருதி உருவாக்கிய மேலை மொழித் தன்மை. பிற்பாடு எல்லாருக்குமே பிடித்துப்போய்விட்டது.

செய்யுளில் சீர்பிரிப்புத் தேவை கருதி மலைய கமக்கள் என்று கூட எழுதுவார்கள். உரையில் தனித்தனிச் சொல்லாக எழுதுதலே நலம். உங்கள் வாசகர் கடுந்தமிழ்த் தேனீ எனில் மலையகமக்கள் என்றும் எழுதலாம்.

புணர்ச்சி விதிகளைத் தமிழ் இலக்கணம் தனி இயலாகவே சொல்லித் தருகிறது. அவை எல்லாவற்றையும் கற்க வேண்டியிருக்காது. புழக்கத்தில் உள்ள விரல்விட்டு எண்ணக் கூடிய விதிகளைப் பழக்கப்படுத்திக்கொண்டால் போதுமானதாயிருக்கும்.

அங்குச் சென்றான் இங்குச் சென்றான் என்றுதான் தமிழ் இலக்கண விதிப்படி எழுத வேண்டும். பாரதியார் ‘அங்கு சென்றான், இங்கு சென்றான்’ என்றுதான் எழுதுவாராம். நண்பர்கள் ‘ஐயா. இது பிழையாயிற்றே !’ என்று கேட்டால் ‘அங்குச் சென்றான் என்று எழுதினால் நன்றாகவே இல்லை, ஓய்’ என்று பாரதி பதிலுரைப்பாராம். இப்படி எழுதுகிறவர்களும் இலக்கண வழுவமைதியைத் தோற்றுவிப்பதுண்டு.

by Swathi   on 17 Dec 2014  2 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
28-Jun-2018 08:34:59 gajendran.v said : Report Abuse
நன்று ............... நல்லஎளிமையான விளக்கம் அய்யா ....வாழ்க தமிழ்..................... ...............................................
 
23-Jul-2015 03:16:35 துரைராஜ் said : Report Abuse
அருமை, எளிமையாக விளக்கியிருக்கிறீர்கள் நன்றி
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.