|
|||||
காலணிகள் வாங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை ! |
|||||
காலுக்கு இதமாக இருக்க வேண்டும் என்பதற்காக வாங்கப்பட்ட காலணிகள் கால மாற்றத்தின் காரணமாக அழகுக்காகவும், ஆடம்பரத்திற்காகவும் வாங்கப்படுகின்றன. இன்றைய இளம் தலைமுறையினர் ஆடை, அணிகலன்களுக்கு நிகராக காலணிகளுக்கும் அதே முக்கியத்துவத்தை தருகின்றனர். இதனால் தான் என்னவோ காலனிகளின் விலையும் உயர்ந்துள்ளது.
1.இளம் பெண்கள் பெரும்பாலும் கலர்புல் செருப்புகளையும், ஆடைக்கு ஏற்ற மேட்சான செருப்புகளையுமே விரும்புகின்றனர். ஆனால் காலணிகள் என்பது உள்ளங்காலோடு நெருங்கிய தொடர்பு உடையதால் அதை வயதிற்கு ஏற்றாற் போலும், காலின் அளவிற்கு தக்கபடியும் வாங்குவது நல்லது. ஏனென்றால் உள்ளங்காலுடன் நமது உடலில் உள்ள அனைத்து முக்கிய நரம்புகளும் தொடர்புடையது.
2.காலணிகளை வாங்கும் போது மூன்று முக்கிய விசயங்களை கருத்தில் கொள்ளவேண்டும். அவை சௌகரியம், அழகு, நிறம் ஆகியவை.
3.காலணிகள் பளிச் நிறத்தில் இருப்பதை விட, இளநிறத்தில் இருப்பது சிறந்து.
4.இன்றைய இளம் தலைமுறை பெண்கள் பெரும்பாலும் ஹீல்ஸ் செருப்புகளையே விரும்புகின்றனர். இந்த வகை செருப்புகள் முன்பகுதி குறுகி, குதிகால் உயர்ந்து இருகின்றன. செருப்புகளின் முன்பகுதி குறுகி உள்ளதால் விரல்கள் அழுத்தத்திற்கு உள்ளாகின்றன. மேலும் வர்மப் புள்ளிகளும் அழுத்தப்படுவதால், உடலில் பலவித பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதனால் தலைவலி, கண் வலி, முதுகுவலி, குதிகால் வலி, சோர்வு, கால்வலி ஆகிய பிரச்சினைகள் ஏற்படும். மேலும் இறுக்கிப் பிடிக்கும் விரல்களில் கொப்பளங்கள் ஏற்படும். இயல்பாக நடக்க முடியாமல் நெருக்கடி ஏற்படும்.
5.கால்கள் மெலிந்து இருப்பவர்கள் பென்ஸி ஹீல்ஸ் என்ற குதிகால் செருப்புகளை தவிர்க்கவும்.
6.பாதம் நீளமாக உள்ளவர்கள் கோடு போட்ட டிசைன்கள் நிறைந்த செருப்புகளை அணிய வேண்டாம். இதனால் பாதம் மேலும் நீளமாக இருப்பதைப் போன்று தோற்றமளிக்கும்.
7.உடல் குண்டாக இருப்பவர்கள் எடை அதிகமான செருப்புகளை அணியக் கூடாது. மேலும் காற்றோட்டமான செருப்புகளை அணிவது நல்லது.
8.செருப்புகளை வாங்கும்போது, அதை வலது காலில் போட்டுப் பார்த்து வாங்கவும்.
9.ஷூக்கள் வாங்கும்போது முன்பக்கம், பின்பக்கம் அழுத்திப் பார்த்து போதுமான இடைவெளி உள்ளதா? என்பதை கவனித்து வாங்குவது நல்லது |
|||||
by Swathi on 22 Aug 2013 0 Comments | |||||
Disclaimer: |
|||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|