LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    ஹெல்த் டிப்ஸ் -(Health Tips) Print Friendly and PDF

காலணிகள் வாங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை !

காலுக்கு இதமாக இருக்க வேண்டும் என்பதற்காக வாங்கப்பட்ட காலணிகள் கால மாற்றத்தின் காரணமாக அழகுக்காகவும், ஆடம்பரத்திற்காகவும் வாங்கப்படுகின்றன. இன்றைய இளம் தலைமுறையினர் ஆடை, அணிகலன்களுக்கு நிகராக காலணிகளுக்கும் அதே முக்கியத்துவத்தை தருகின்றனர். இதனால் தான் என்னவோ காலனிகளின் விலையும் உயர்ந்துள்ளது. 

 

1.இளம் பெண்கள் பெரும்பாலும் கலர்புல் செருப்புகளையும், ஆடைக்கு ஏற்ற மேட்சான செருப்புகளையுமே விரும்புகின்றனர். ஆனால் காலணிகள் என்பது உள்ளங்காலோடு நெருங்கிய தொடர்பு உடையதால் அதை வயதிற்கு ஏற்றாற் போலும், காலின் அளவிற்கு தக்கபடியும் வாங்குவது நல்லது. ஏனென்றால் உள்ளங்காலுடன் நமது உடலில் உள்ள அனைத்து முக்கிய நரம்புகளும் தொடர்புடையது.

 

2.காலணிகளை வாங்கும் போது மூன்று முக்கிய விசயங்களை கருத்தில் கொள்ளவேண்டும். அவை சௌகரியம், அழகு, நிறம் ஆகியவை. 

 

3.காலணிகள் பளிச் நிறத்தில் இருப்பதை விட, இளநிறத்தில் இருப்பது சிறந்து.

 

4.இன்றைய இளம் தலைமுறை பெண்கள் பெரும்பாலும் ஹீல்ஸ் செருப்புகளையே விரும்புகின்றனர். இந்த வகை செருப்புகள் முன்பகுதி குறுகி, குதிகால் உயர்ந்து இருகின்றன. செருப்புகளின் முன்பகுதி குறுகி உள்ளதால் விரல்கள் அழுத்தத்திற்கு உள்ளாகின்றன. மேலும் வர்மப் புள்ளிகளும் அழுத்தப்படுவதால், உடலில் பலவித பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதனால் தலைவலி, கண் வலி, முதுகுவலி, குதிகால் வலி, சோர்வு, கால்வலி ஆகிய பிரச்சினைகள் ஏற்படும். மேலும் இறுக்கிப் பிடிக்கும் விரல்களில் கொப்பளங்கள் ஏற்படும். இயல்பாக நடக்க முடியாமல் நெருக்கடி ஏற்படும். 

 

5.கால்கள் மெலிந்து இருப்பவர்கள் பென்ஸி ஹீல்ஸ் என்ற குதிகால் செருப்புகளை தவிர்க்கவும்.

 

6.பாதம் நீளமாக உள்ளவர்கள் கோடு போட்ட டிசைன்கள் நிறைந்த செருப்புகளை அணிய வேண்டாம். இதனால் பாதம் மேலும் நீளமாக இருப்பதைப் போன்று தோற்றமளிக்கும். 

 

7.உடல் குண்டாக இருப்பவர்கள் எடை அதிகமான செருப்புகளை அணியக் கூடாது. மேலும் காற்றோட்டமான செருப்புகளை அணிவது நல்லது.

 

8.செருப்புகளை வாங்கும்போது, அதை வலது காலில் போட்டுப் பார்த்து வாங்கவும். 

 

9.ஷூக்கள் வாங்கும்போது முன்பக்கம், பின்பக்கம் அழுத்திப் பார்த்து போதுமான இடைவெளி உள்ளதா? என்பதை கவனித்து வாங்குவது நல்லது

by Swathi   on 22 Aug 2013  0 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
முருங்கை இலையில் இவ்வளவு சத்து உள்ளதா? முருங்கை இலையில் இவ்வளவு சத்து உள்ளதா?
8 நடைப்பயிற்சி 8 நடைப்பயிற்சி
இருதயம் சீராக இயங்க இருதயம் சீராக இயங்க
சாப்பிடும் முறை... சாப்பிடும் முறை...
மருந்தகங்களில் கிடைக்காத மருந்துகள்* மருந்தகங்களில் கிடைக்காத மருந்துகள்*
முக்கிய மருத்துவக் குறிப்புகள் முக்கிய மருத்துவக் குறிப்புகள்
கிட்னி கல் கரைய  பூளைப்பூ வைத்தியம் கிட்னி கல் கரைய பூளைப்பூ வைத்தியம்
நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா? மாரடைப்புக்கு   சூடான குடிநீர் நல்லது நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா? மாரடைப்புக்கு சூடான குடிநீர் நல்லது
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.