LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

பறக்கும் விமானத்தில் மாரடைப்பால் விமானி சாவு !! விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய பயணி !!!

நடுவானத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் விமானி, மாரடைப்பால் சரிந்த நிலையில், முன் அனுபவம் இல்லாத பயணி ஒருவர் விமானத்தை பத்திரமாக தரையிறக்கியுள்ளார். 

 

இங்கிலாந்தில், ஹம்பர்சைட் விமான நிலையத்தில் இருந்து நேற்று முன் தினம் சிறிய ரக விமானம் ஒன்று, பயணிகளுடன் கெக்னெஸ் என்ற இடத்துக்கு புறப்பட்டது. நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, திடீரென விமானிக்கு மாரடைப்பு வந்தது, உடனே, விமானி, விமான நிலைய கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு, தன்னுடைய உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது என்றும், விமானத்தை ஓட்ட முடியவில்லை என்றும் கூறிவிட்டு, சரிந்து விழுந்தார். உடனே, விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், விமானத்தில் இருந்த பயணியிடம், விமானத்தை இயக்குவது குறித்து வழிகாட்டினர். அதன்படி, விமானத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பயணி, அவசரமாக, தரையிறக்கினார்.

 

குறைந்த ஒளியின் காரணமாக, விமானம் பத்திரமாக தரையிறக்குவதில் சிரமம் ஏற்பட்டது. எனினும், விமான கட்டுப்பாட்டு அதிகாரிகளின், வழிகாட்டுதலின்படி, அந்தப் பயணி, விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார். பிறகு விமானியை மீட்டு பரிசோதித்ததில், விமானி இறந்திருப்பது தெரியவந்தது. 

by Swathi   on 10 Oct 2013  2 Comments
Tags: மாரடைப்பு   விமானி   பயணி   பத்திரமாக           
 தொடர்புடையவை-Related Articles
பறக்கும் விமானத்தில் மாரடைப்பால் விமானி சாவு !! விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய பயணி !!! பறக்கும் விமானத்தில் மாரடைப்பால் விமானி சாவு !! விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய பயணி !!!
உயிரை கொடுத்து பயணிகளின் உயிரை காப்பாற்றிய பேருந்து ஓட்டுநர்! உயிரை கொடுத்து பயணிகளின் உயிரை காப்பாற்றிய பேருந்து ஓட்டுநர்!
கருத்துகள்
13-Oct-2013 00:43:39 arun pandiyan said : Report Abuse
Nalla velai theeviravadhigal yarum vimanathai kaipatra villai.
 
11-Oct-2013 10:47:53 பிரகாஷ் said : Report Abuse
ஓடும் விமானமா? அது பறக்கும் விமானம். தப்பான டைட்டில்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.