LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- வைக்கம் முஹம்மது பஷீர்

நூறு ரூபாய் நோட்டு

அதிகாலை வேளையில் குளித்து முடித்து, காப்பி குடித்து விட்டு, சந்தோஷத்துடன் விடை பெற்றுச் சென்ற விருந்தாளி, மதியம் நெருங்கிக் கொண்டிருந்த நேரத்தில் வியர்வையில் நனைந்து களைப்புடன் திரும்பி வந்து தன்னை உபசரித்தவனுக்கு முன்னால் ஒரு நூறு ரூபாய் நோட்டை வைத்துவிட்டுச் சொன்னார்:

""மன்னிக்கணும். நான் பெரிய ஒரு தவறைச் செய்துவிட்டேன். படகுத் துறையில் உட்கார்ந்து கொண்டு நான் நீண்ட நேரம் சிந்தித்தேன். வாழ்க்கைக்கு ஒரு தத்துவ அறிவியலைக் கண்டு பிடிக்க முடியவில்லை. சிந்தனைகள் இப்படியும் அப்படியுமாகப் பிணைந்து கிடக்கின்றன. மொத்தத்தில் - மிகவும் சிரமம். நீங்கள் என்னை நல்ல முகத்துடன் வரவேற்றீர்கள். பொருத்தமற்ற நேரத்தில் வந்த எனக்கு உணவு தந்தீர்கள். இரவில் படுப்பதற்கு சிறந்த இடத்தையும் தந்தீர்கள். நமக்கிடையில் ஒரு அறிமுகம் இல்லை. எனினும், நீங்கள் என்னை மரியாதைக்குரிய விருந்தாளியாக ஏற்றுக் கொண்டீர்கள். நான் உங்களுக்கு பெரிய ஒரு தவறைச் செய்து விட்டேன்.''



""என்ன தவறு?''

""இந்த நூறு ரூபாய் நோட்டு. நேற்று பாதி இரவு தாண்டிய பிறகும் எனக்குத் தூக்கம் வரவில்லை. நான் இந்த உலகத்தைப் பற்றியும் வாழ்க்கையைப் பற்றியும் சிந்தித்துக் கொண்டே படுத் திருந்தேன். மனதில் அமைதியில்லை. விளக்கு எரிந்து கொண்டிருந் தது. நான் படுக்கையில் எழுந்து உட்கார்ந்தேன். எதையாவது வாசிக்கலாம் என்று நினைத்தேன். புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட் டிருந்த உங்களுடைய அலமாரி பூட்டப்படாமல் இருந்தது. நான் அதைத் திறந்தேன். ஏராளமான புத்தகங்கள் இருப்பதைப் பார்த் தேன். சுயசரிதைகள், பயண நினைவுகள், தத்துவ அறிவியல் நூல்கள், கவிதைகள், கதைகள்... அந்தக் கூட்டத்தில் பகவத் கீதை, பைபிள், குர்ஆன்... நான் அவற்றில் இருந்த குர்ஆனை எடுத்தேன். ஆங்கிலத் திலும் இந்தியிலும் இருந்தது. அழகான நூல். நான் சிறிது நேரம் அதன் முதல் பகுதியைப் படித்தேன். பின்னர் மடக்கி வைத்துவிட் டேன். நான் அதை என்னுடைய மார்பின்மீது வைத்துக் கொண்டு சிறிதுநேரம் படுத்திருந்தேன். குர்ஆன் உலகத்திலுள்ள எல்லா மொழிகளிலும் வந்திருக்க வேண்டும். இது தெய்வத்தின் வார்த்தைகள் என்று கூறுகிறார்கள். மக்களில் எவ்வளவோ பேர் அப்படி நம்புகிறார்கள். ஜிப்ரில் என்ற தேவதூதன் அரேபியாவில் பிறந்த முஹம்மதிற்குக் கூறியவைதான் அது. முஹம்மதிற்கு எழுதவோ வாசிக்கவோ தெரியாது. நான் நினைத்துப் பார்த்தேன். தெய்வம் என்று ஒரு முதற்காரணம் இருக்கிறதா? பிரபஞ்சத்தையும் எல்லா வற்றையும் படைத்தது தெய்வம் என்று தானே கூறுகிறார்கள்! ஆனால், எல்லாம் தானே உண்டானவைதானே! நான் மீண் டும் குர்ஆனைத் திறந்தேன். நான் மொத்தத்தில்... என்ன கூறுவது?

எனக்கு ஒரு குழப்பம் போலத் தோன்றியது. குர்ஆனுக்கு உள்ளே நான்காக மடிக்கப்பட்ட ஒரு புதிய நூறு ரூபாய் நோட்டு இருக்கிறது! நீங்களும் உங்களுடைய வீட்டில் இருப்பவர்களுக்கு தூக்கத்தில் இருக்கிறீர்கள் நான் நோட்டை எடுத்து என்னுடைய பாக்கெட்டில் வைத்துவிட்டு, குர்ஆனைத் திரும்பவும் அலமாரியில் வைத்தேன். பிறகு விளக்கை அணைத்துவிட்டுப் படுத்துவிட்டேன். இன்று காலையில் குளித்து முடித்து, காப்பி தந்து நீங்கள் என்னை சந்தோஷத்துடன் வழியனுப்பி வைத்தீர்கள். வழிச் செலவிற்கு காசு இருக்கிறதா என்று நீங்கள் கேட்டீர்கள். இருக்கிறது என்று நான் சொன்னேன். என்னுடைய மனதில் குழப்பம் நிறைந்திருந்தது. நான் திருடன். நான் கிளம்பியபோது நீங்கள் சொன்னீர்கள்: "நம் எல்லாரையும் தெய்வம் காப்பாற்றட்டும்!' நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். உங்களுடைய இந்த நூறு ரூபாய் நோட்டை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்!''

என்னை உபசரித்தவர் நூறு ரூபாய் நோட்டைக் கையில் எடுத்து சிந்தனையில் மூழ்கியவாறு உட்கார்ந்துவிட்டார். பிறகு சொன்னார்:

""பரவாயில்லை. இந்த நோட்டில் ஒரு ஏமாற்றிய கதை இருக்கிறது. எது எப்படியோ - நீங்கள் சாப்பிட்டு முடித்து வெயில் குறைந்த பிறகு போனால் போதும். நான் இந்த நூறு ரூபாய் நோட்டை குர்ஆனுக்குள் வைத்திருக்கக்கூடாது. வாசித்துக் கொண்டி ருந்தபோது அடையாளத்திற்காக வைத்தேன். பிறகு மறந்து விட்டேன். நீங்கள் இதை எடுத்துக் கொண்டு போகாமல் திரும்பவும் வந்தது நல்லதுதான். இனி இதை வைத்திருக்க வேண்டாம். நான்தான் சொன்னேனே - ஒரு ஏமாற்றிய கதை இதில் இருக்கிறது.''

அவர் தீப்பெட்டியை உரசி நூறு ரூபாய் நோட்டின் ஒரு நுனியில் நெருப்பைப் பற்ற வைத்தார். அந்த ஜுவாலையில் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்து இழுத்தார். எந்தவித அசைவும் இல்லாமல் உட்கார்ந்திருந்தார். அவர் சொன்னார்:

""மனிதன் எதற்காக ஏமாற்றுகிறான்? தெரிந்து கொண்டே ஏமாற்றுகிறான். கடவுளை நம்புபவனும் கடவுளை மறுப்பவனும் ஒரே மாதிரி தவறு செய்கிறார்கள். தீமைக்கு தண்டனை இருக்கிறது. அதை மனிதன் மறந்துவிடுகிறான். ஆனால் மறதிதானா? அறிந்து கொண்டே தவறு செய்கிறான். அந்த நூறு ரூபாய் நோட்டை எடுத்தபோது, நீங்கள் ஒரு தவறு செய்தீர்கள். இன்னொருவனுக்குச் சொந்தமான பொருளை அடைய நினைக்கக் கூடாது. உங்களுடைய மனசாட்சி ஒத்துக் கொள்ளவில்லை. இதயத்திற்குள் ஒரு கவலை. நீங்கள் அதைத் திரும்ப கொண்டு வந்து தந்து விட்டீர்கள். உங்களு டைய மனசாட்சி ஏன் சம்மதிக்கவில்லை? அந்த நூறு ரூபாய் நோட்டு எப்படி உண்டானது? தானே உண்டானதா? குர்ஆனுக்குள் எப்படி வந்தது? நான் சொன்னேனே... நான்தான் அதை வைத்தேன். நான் எப்படி உண்டானேன்? நீங்கள் எப்படி உண்டானீர்கள்? அந்த நோட்டு இங்கு எப்படி வந்தது என்பதைக் கூறுகிறேன். கடவுள் பக்தரான ஒரு மனிதன்... அவருக்கு இரண்டு மூன்று ஆண் பிள்ளை கள். பெரிய சொத்து இல்லை. சிரமப்பட்டு வாழலாம். வீடுதோறும் பத்திரிகைகளையும், மாத இதழ்களையும் கொண்டுபோய் கொடுப் பார். புத்தகங்களையும் அப்படித்தான். அவர் எனக்கு அறிமுகமா னார். நல்ல பழக்க வழக்கங்களைக் கொண்டவர். அவர் தன் பிள்ளைகளைப் படிக்க வைத்தார். மிகவும் சிரமப்பட்டுத்தான். மூத்த இரண்டு பிள்ளைகள் எம்.ஏ. வில் தேர்ச்சி பெற்றார்கள். அவர் களுக்கு வேலை கிடைத்தது. எல்லாரிலும் இளைய மகன் ப்ரீ டிகிரிக் குப் படிக்கும்போது, தந்தை காலமாகிவிட்டார். அந்த வகையில் அந்த இளைஞனின் படிப்பு நின்றுவிட்டது. ஆள் பார்ப்பதற்கு நல்ல குணங்களைக் கொண்டவன் என்பதைப் போலத் தோன்றியது. சிரித்துக் கொண்டேதான் பேசுவான். எல்லா நாட்களிலும் என்னைத் தேடி வருவான். தந்தையின் சிறப்புகளைப் பற்றி நான் பேசுவேன். பிள்ளைகளை நல்ல நிலையில் வளர்ப்பதற்கு முயற்சித்த தந்தை! அது ஞாபகத்தில் இருக்க வேண்டும். நல்ல நிலைமைக்கு வளர வேண்டும். நல்ல மனிதனாக வாழ வேண்டும். இளைஞன். கவர்ச்சிகளுக்கு ஆட்பட்டுவிடக்கூடாது. தவறுகளும் சரியானவை யும் இருக்கின்றன. தவறுகள் செய்யாமல் வாழவேண்டும். இப்படியே சிறிது காலம் கடந்தது. அவன் பொதுக் காரியங்களில் ஈடுபட்டு பெயர் பெற்றவனாக ஆனான். அரசியல் கட்சியில் சேர்ந்தான். என்னைத் தேடி வந்து அரசியல் விஷயங்களைப் பேசிக் கொண்டிருப்பான். ஒரு நாள் - என்னிடம் ஐந்து ரூபாய் கடனாகக் கேட்டான். நாள் அதைக் கொடுத்தேன். சொன்ன நாளில் திருப்பித் தந்தான். பிறகு பத்து ரூபாய்... இருபது ... ஐம்பது... எல்லாவற்றையும் மிகவும் சரியாக சொன்ன நாளில் திருப்பித் தந்தான். கடைசியாக நூறு ரூபாய் கடனாகக் கேட்டான். தோன்றும்போது பணத்தைக் எடுக்ககூடிய ஒரு நிலையில் நான் இல்லை. எனினும், நான் அதை உண்டாக்கிக் கொடுத்தேன். சொன்ன நாளில் தரவில்லை. அது மட்டுமல்ல - என்னை வந்து பார்ப்பதும் இல்லை. எப்போதாவது பார்த்தாலும், பார்த்தது மாதிரி அவன் காட்டிக் கொள்ளவதில்லை. நானோ மிகவும் சிரமப்பட்டு தன் பிள்ளைகளைப் படிக்க வைத்த அவனுடைய தந்தையைப் பற்றி நினைத்துப் பார்த்தேன். ஒரு நாள் மகனை நான் சாலையில் தடுத்தி நிறுத்திச் சொன்னேன்: "நீங்கள் திருப்பித் தருவதாகச் சொல்லி என்னிடம் நூறு ரூபாய் கடனாக வாங்கி யதை மறந்துடுங்க. நானும் மறந்து விடுகிறேன். ஷேக் ஹேண்ட்ஸ்...' அப்படியே நாங்கள் பிரிந்துவிட்டோம். இனிமேல்தான் சுவராசி யமே. மனிதன் எதற்கு இப்படி நடந்து கொள்கிறான்? சில மாதங்கள் கடந்த பிறகு, ஒரு இளைஞன் ஒரு நூறு ரூபாய் நோட்டைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு, என்னிடமிருந்து ரசீது வாங்கிக் கொண்டு சென்றான். நான் பணத்தைக் கொடுக்கும்போது ரசீது வாங்கவில்லை. அந்த நூறு ரூபாய் நோட்டைத்தான் நீங்கள் குர்ஆனில் இருந்து எடுத் துக் கொண்டு போய், திருப்பிக் கொண்டு வந்து தந்திருக்கிறீர்கள்.''

""அதை ஏன் நெருப்பில் எரித்தீர்கள்?''

""உங்களுக்குப் புரியவில்லையா?'' - என்னை உபசரித்தவர் கேட்டார்.

""அது கள்ள நோட்டு! நூறு ரூபாய் நோட்டு!''

by Swathi   on 27 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.