இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் படம் வாலு.
இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். வாலு படத்தின் படபிடிப்புகளும், டப்பிங் பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளது. ஆனால் தற்போது, ஒரு பாடல் காட்சி மாட்டுமே பாக்கி உள்ளது. குறளரசன் இசையில் டி.ஆர். பாடியுள்ள ஒரு பாடலில் சிம்பு எம்.ஜி.ஆர், ரஜினி, அஜித், சிம்பு என நான்கு கெட்டப்களில் நடனம் ஆட உள்ளார். இதில் நான்கு தலைமுறை நாயகிகளும் நடனம் ஆட உள்ளனர்.
இப்போதைக்கு சிம்ரன் மட்டுமே சிம்புவுடன் நடனமாடுவது உறுதி ஆகியிருக்கிறது. இந்நிலையில், அடுத்த செய்தியாக படம் டிசம்பர் 25ல் 'வாலு' வெளியாகும் என அறிவிப்புகள் வெளியான நிலையில் மீண்டும் படம் தள்ளிப்போடப்பட்டுள்ளது.
'வாலு' பிப்ரவரியில் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த அறிக்கையில் சிம்பு கூறியதவாது: ஒரு நடிகனாக இந்த வருடமும் எனது படம் வெளியாகாதது எனக்கும் ஏமாற்றமே. எனினும், படம் கண்டிப்பாக ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்பதால் படத்தை பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளோம்.
எனவே, ‘வாலு’ படம் பிப்ரவரியில் வெளியாகும். இது நம்ம ஆளு கோடைகால விடுமுறையில் வெளியாகும் என சிம்பு தெரிவித்துள்ளார்.
|