பாரத பிரதமராக வேண்டும் என நான் காணவு காணவில்லை என, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் காந்திநகர், பகுதியில் உள்ள ஒரு பள்ளியில், ஆசிரியர் தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, நரேந்திர மோடி, மாணவர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்து பேசியதாவது, குஜராத் மக்களுக்கு நான் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் நிறைய உள்ளது. குஜராத் முதல்வராக 2017-ம் ஆண்டு வரை நான் உங்களுக்கு சேவை செய்வேன். நான் பிரதமர் கனவில் மிதப்பதாக சிலர் என்னை சித்தரிக்கின்றனர். பிரதமர் ஆக வேண்டும் என்ற கனவில் நான் இல்லை. குஜராத் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற கனவில் தான் இருப்பதாக நரேந்திர மோடி தெரிவித்தார்.
|