LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

லிங்கா ரஜினியை பார்த்து வியந்து போனேன் - சொல்கிறார் ராதாரவி !!

கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் படம் லிங்கா...


இந்த படத்தின் படபிடிப்பு தற்போது கர்நாடகாவில் நடைபெற்று வருகிறது. 


இந்த படம் குறித்த பல சுவாரசிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. 


இந்நிலையில், படத்தில் நடித்த அனுபவம் குறித்து, ராதாரவி கூறியதாவது, 


படத்தில், ஒரு பெரிய 'டேம்' மீது ஏறி ரஜினி வசனம் பேச வேண்டும். அந்த காட்சியில் அவர் பேசும்போது அவர் கூட நான் மட்டுமே இருக்க வேண்டும்.


அதனால் ரவிக்குமார் என்னையும் ரஜினியையும் 'டேம்' மீது ஏற சொல்லிவிட்டார். நான் கூட வருவதை கவனிக்காமல் ரஜினிகாந்த் விறு விறு என படிக்கட்டில் அவரது வேகத்தில் ஏறி "நான் ரெடி" என்று சொல்லி விட்டார்.


அவர் கூட ஏறத்தொடங்கிய நானோ பாதி படியைக்கூட தாண்டவில்லை. இதே போல் ஒரு அனுபவம் 20 வருடத்திற்க்கு முன்பு உழைப்பாளி படத்திலும் எனக்கு ஏற்பட்டது. அதே ரஜினியை தான் நான் லிங்காவிலும் பார்க்கிறேன். ரஜினி என்னை விட வயதில் பெரியவர் என்றாலும் அவர் வேகத்திற்க்கும் சுறுசுறுப்பிற்க்கும் என்னால் ஈடு கொடுக்க முடியவில்லை.


நான் இதுவரை 296 படங்களில் நடித்துள்ளேன். தற்போது நடித்து வரும் லிங்கா தான் என்னுடைய திரை வாழ்க்கையின் மைல் கல்லாக இருக்கும் என ராதாரவி தெரிவித்துள்ளார்.

by Swathi   on 03 Sep 2014  0 Comments
Tags: Lingaa Rajini   Radha Ravi                 
 தொடர்புடையவை-Related Articles
லிங்கா ரஜினியை பார்த்து வியந்து போனேன் - சொல்கிறார் ராதாரவி !! லிங்கா ரஜினியை பார்த்து வியந்து போனேன் - சொல்கிறார் ராதாரவி !!
கெளபாய் தோற்றத்தில் ரஜினி !! கெளபாய் தோற்றத்தில் ரஜினி !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.