உலகிலேயே மிக உயரமான ஓடுதளத்தில், அதுவும் சீன எல்லையில் இந்தியாவின் போர் விமானம் சூப்பர் ஹெர்குலிஸ் களம் இறக்கப்பட்டுள்ளது.
சீன ராணுவம் இந்திய எல்லை பகுதியில் அத்துமீறுவது தொடர்கதையாகி வரும் நிலையில், அந்த பகுதியில் உண்மையான எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகில் தவுலத் பெக் ஓல்டி விமான ஓடுதளத்தில், இந்திய விமானப்படை சூப்பர் ஹெர்குலிஸ் போக்குவரத்து விமானத்தை நேற்று காலை தரை இறக்கியது.
இந்த விமான ஓடுதளம் கடல் மட்டத்தில் இருந்து 16 ஆயிரத்து 614 அடி உயரத்தில் அமைந்துள்ளது. அந்த வகையில் உலகிலேயே உயரமான விமான ஓடு தளம் இதுதான். இங்கு சூப்பர் ஹெர்குலிஸ் போக்குவரத்து விமானத்தை விமானப்படை களம் இறக்கி இருப்பது, வீரர்களை பெரிய அளவில் ஏற்றிச்செல்வதற்கும், தளவாடங்களை கொண்டுபோவதற்கும், அதிநவீன தகவல் தொடர்பு வசதிக்கும் மிகவும் உதவியாக இருக்கும். அது மட்டுமல்ல, இந்த விமானத்தை உண்மையான எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகில் நிறுத்தி இருப்பது இந்திய ராணுவத்திற்கு மிகுந்த மன உறுதியை, நம்பிக்கையை அளிப்பதாகவும் அமைந்துள்ளது. உலகின் மிக உயரமான விமான ஓடுதளத்தில் சூப்பர் ஹெர்குலிஸ் விமானத்தை நிறுத்தி நேற்று இந்திய ராணுவம் சாதனை படைத்துள்ளது.
|