அணுசக்திக்கு தேவைப்படும் அரியவகை கனிமமான யுரேனியம் வகையை சேர்ந்த இயாந்தினைட் கனிமம் ஆந்திராவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரியவகை கனிமங்களை கொண்டுள்ள நாடுகளின் வரிசையி்ல இந்தியா இணைந்துள்ளது.
அணுசக்திக்கு தேவையான அரிய வகை கனிமமான யுரேனியம் வகையை சேர்ந்த யுரேனியம் ஆக்ஸைடின் மற்றொரு வகையான இயாந்தினைட் என்ற கனிமம் ஆந்திர மாநிலம் மெகபூப்நகர் மாவட்டத்தில் உள்ள அக்காவரம் என்ற கிராமத்தில் உள்ளதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி அமெரிக்கா, ஜெர்மனி , பிரான்ஸ் உட்பட எட்டு நாடுகளில் மட்டுமே இந்த வகையான கனிம வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முதன் முறையாக இயாந்தினைட் கனிம வளம் காங்கோவில் 1920-ம் ஆண்டில் கண்டுபிடிக்கப் பட்டது. இருப்பினும் இந்தியாவில் இதற்கான முயற்சி எடுக்கப்படவில்லை. தற்போது அணுசக்தி இயக்குனரகத்தை சேர்ந்த பி.எஸ். பாரிகர், எஸ்.கே. ஸ்ரீவத்சவா, யமுனாசிங், கே.கே. பரஸ்கார், பி.வி.ரமேஷ்பாபு, மற்றும் ஆர். விஸ்வநாதன் ஆகியோர் இதனை கண்டு பிடித்துள்ளனர்.
இயாந்தினைட் கனிம வளம் இருப்பதை உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய அறிவியல் அகாடமியின் சமீபத்திய இதழில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் அனாடைஸ்,ருட்டில், ஆராய்ச்சியாளர்கள் மைக்ரோலைன், பயோடைட், மற்றும் குவார்ட்ஸ் போன்ற கனிம வகைகள் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
|