LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் ஓய்வு பெற்ற உடனையே அரசியலில் இறங்கலாம் - மத்திய அரசு !!!

ஓய்வு பெற்ற உடனேயே ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அரசியலில் ஈடுபட தடை விதிக்க வேண்டும் என்ற தேர்தல் கமிஷன் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்டது.

 

தற்போதைய விதிகளின் படி ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பதவியில் இருந்து ஓய்வு பெற்றதும் அல்லது பதவி விலகியதும் உடனடியாக தனியார் துறையில் பணியில் சேர முடியாது. குறைந்தது ஒரு வருடத்துக்குப் பிறகுதான் அவர்கள் பிற வேலைக்கு செல்ல முடியும். ஆனால் அவர்கள் உடனடியாக அரசியலில் ஈடுபடுவது குறித்தும், தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் அரசு விதிகள் எதுவும் கூறவில்லை. இதனால், ஓய்வு பெற்ற அதிகாரிகள் உடனடியாக அரசியலில் களம் இறங்குகிறார்கள். இது தொடர்பாக தேர்தல் கமிஷனுக்கு புகார்கள் சென்றன. அதைத் தடுக்கிற விதத்தில் மத்திய அரசின் பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை, சட்டத்துறை அமைச்சகங்களுக்கு தேர்தல் கமிஷன் கடந்த ஆண்டு ஒரு கடிதம் எழுதியது. அதில், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மற்றும் ‘ஏ’ வகுப்பு அதிகார வர்க்கத்தினர் பணியில் இருந்து ஓய்வு பெற்றவுடன் அல்லது பதவியை ராஜினாமா செய்த பின்னர் குறிப்பிட்ட காலம் வரை அரசியலில் ஈடுபடுவதைத் தடுக்க விதியை சேர்க்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இது தொடர்பாக அட்டார்னி ஜெனரல் ஜி.இ. வாஹன்வதியின் கருத்தை மத்திய அரசு கேட்டது. இதற்கு பதிலளித்த அட்டார்னி ஜெனரல், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.,அதிகாரிகள் ஓய்வு பெற்ற உடனையே அரசியலில் ஈடுபட தடை விதித்தால், அது இந்திய அரசியல் சட்டம் பிரிவு 14–க்கு எதிரானதாக அமையும் என கருத்து தெரிவித்திருந்தார். இதனை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, தேர்தல் கமிசன் கோரிக்கையை நிராகரித்தது. 

by Swathi   on 06 Oct 2013  0 Comments
Tags: ஐ.ஏ.எஸ்.   ஐ.பி.எஸ்   அதிகாரிகள்   அரசியல்   IAS   IPS   Officers  
 தொடர்புடையவை-Related Articles
சென்னையில் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கத் தமிழிசை விழா-2015: இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையின் 11-ஆம் ஆண்டு விழாவில் நடந்த பேரவையின் 3-ஆம் ஆண்டு தமிழிசை விழா சென்னையில் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கத் தமிழிசை விழா-2015: இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையின் 11-ஆம் ஆண்டு விழாவில் நடந்த பேரவையின் 3-ஆம் ஆண்டு தமிழிசை விழா
அரசியலில் நுழைவது - கவிஞர் மகுடேசுவரன் அரசியலில் நுழைவது - கவிஞர் மகுடேசுவரன்
செய்திகளின் நாயகன் யார் ? - கவிஞர் மகுடேசுவரன் செய்திகளின் நாயகன் யார் ? - கவிஞர் மகுடேசுவரன்
எனக்கு அரசியல் தெரியாது, நடிக்கத்தான் தெரியும் : கார்த்தி !! எனக்கு அரசியல் தெரியாது, நடிக்கத்தான் தெரியும் : கார்த்தி !!
ஐ.ஏ.எஸ். தேர்வுக்குமுன் / தேர்வில் கடைப்பிடிக்கவேண்டிய அத்தியாவசிய உத்திகள்-பேராசிரியர் அறிஞர் அப்பாத்துரை ஐ.ஏ.எஸ். தேர்வுக்குமுன் / தேர்வில் கடைப்பிடிக்கவேண்டிய அத்தியாவசிய உத்திகள்-பேராசிரியர் அறிஞர் அப்பாத்துரை
அரசியல் குறித்து ரஜினி கருத்து !! அரசியல் குறித்து ரஜினி கருத்து !!
மனிதநேய மையம் இலவச ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் பயிற்சி மனிதநேய மையம் இலவச ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் பயிற்சி
ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ் தேர்வர்களுக்கு கூடுதலாக இரண்டு வாய்ப்பு !! ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ் தேர்வர்களுக்கு கூடுதலாக இரண்டு வாய்ப்பு !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.