ரயில் பயணிகள் அனைவருக்கும் அடையாள அட்டை வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட உள்ளது.டிக்கெட்டை தவறாக பயன்படுத்துவது,டிக்கெட் இன்றி பயணம் செய்வது ஆகியவற்றை குறைக்க இந்திய ரயில்வே துறை அடையாள அட்டை சான்று வைத்திருப்பதை கட்டாயமாக்க உள்ளது. இதுவரை முன்பதிவு பிரிவில் மட்டும் இச்சான்று கட்டாயமாக்கப்பட்டது. இனி இரயில் பயணம் செய்யும் அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த செயல் திட்டம் வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. தற்போது இ-டிக்கெட், தட்கல் டிக்கெட்கள், ஏசி வகுப்புக்களில் பயணம் செய்யும் பயணிகள் மட்டும் தங்கள் பயணத்தின் போது அடையாள சான்றை அளிக்க வேண்டும் என்ற திட்டம் தற்போது வழக்கத்தில் உள்ளது.அடையாள சான்று குறித்த பட்டியலையும் நீட்டிக்க ரயி்ல்வே துறை முடிவு செய்துள்ளது. இனி வரும் காலங்களில் மாநில அல்லது மத்திய அரசுக் உட்பட்ட பொதுத்துறை, மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகத்தின் அங்கீகாரம் பெற்ற சான்றுகளில் புகைப்படம் கூடிய அடையாள அட்டை ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் பயணிகள் அனைவருக்கும் அடையாள அட்டை வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட உள்ளது.டிக்கெட்டை தவறாக பயன்படுத்துவது,டிக்கெட் இன்றி பயணம் செய்வது ஆகியவற்றை குறைக்க இந்திய ரயில்வே துறை அடையாள அட்டை சான்று வைத்திருப்பதை கட்டாயமாக்க உள்ளது. இதுவரை முன்பதிவு பிரிவில் மட்டும் இச்சான்று கட்டாயமாக்கப்பட்டது. இனி இரயில் பயணம் செய்யும் அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த செயல் திட்டம் வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. தற்போது இ-டிக்கெட், தட்கல் டிக்கெட்கள், ஏசி வகுப்புக்களில் பயணம் செய்யும் பயணிகள் மட்டும் தங்கள் பயணத்தின் போது அடையாள சான்றை அளிக்க வேண்டும் என்ற திட்டம் தற்போது வழக்கத்தில் உள்ளது.அடையாள சான்று குறித்த பட்டியலையும் நீட்டிக்க ரயி்ல்வே துறை முடிவு செய்துள்ளது. இனி வரும் காலங்களில் மாநில அல்லது மத்திய அரசுக் உட்பட்ட பொதுத்துறை, மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகத்தின் அங்கீகாரம் பெற்ற சான்றுகளில் புகைப்படம் கூடிய அடையாள அட்டை ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|