மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தொழிற்துறை வளர்ச்சி வங்கியான இன்டஸ்ட்ரியல் டெவலப்மென்ட் பேங்க் ஆப் இந்தியா எனப்படும் ஐ.டி.பி.ஐ., வங்கியில் காலியாக உள்ள 500 உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 3/2015-16
பணி : உதவி மேலாளர் (Assistant Manager)
காலியிடங்கள்: 500
சம்பளம்: மாதம் ரூ.14,400 - 40,900
வயது : 01.06.2015 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 20 வயது நிரம்பியவர்களாகவும், 28 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். அதாவது 02.06.1987க்கு பின்னரும், 01.06.1995க்கு முன்னரும் பிறந்தவர்கள் இந்த படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். இந்த கல்வித் தகுதியுடன் விண்ணப்பதாரர்கள் கம்ப்யூட்டர் தொடர்புடைய திறனும் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பெங்களூரில் உள்ள Manipal School of Banking கல்லூரியில் ஒரு வருட டிப்ளமோ படிப்பிற்கு அனுமதிக்கப்படுவர். படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 02.08.2015
தமிழ்நாட்டில் ஆன்லைன் எழுத்துத்தேர்வு நடைபெறும் இடம்:
சென்னை
மதுரை
கோவை
படிப்பின் காலம்: இந்தப் படிப்பு ஒரு வருட காலம் படிக்கக்கூடியது. போஸ்ட் கிராஜூவேட் டிப்ளமோ இன் பேங்கிங் அண்டு பினான்ஸ் எனப்படும் பி.ஜி.டி.பி.எப்., படிப்பாகும்.
காலியிடங்கள் எவ்வளவு: இந்தப் படிப்புடன் கூடிய பணிவாய்ப்பில் மொத்தம் 500 காலியிடங்கள் உள்ளன. இவற்றிற்கு அரசு நிபந்தனைகளின்படி எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு இட ஒதுக்கீடும் உள்ளது.
விண்ணப்பக்கட்டணம்: விண்ணப்பதாரர்கள் ரூ.700/--ஐ இந்த படிப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் ரூ.150/-மட்டும் செலுத்தினால் போதுமானது.
விண்ணப்பிக்கும் முறை: www.idbi.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி: 24.06.2015
|