LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

அரசு அதிகாரிகள் தங்களின் பணிகளை சரியாக செய்தால் நாட்டில் ஊழலே இருக்காது ! அசோக் கேம்கா !

அரசு அதிகாரிகள் தங்களின் பணியை சரியாகவும், நேர்மையாகவும் செய்தால் நாட்டில் ஊழல்களே நடைபெறாது என அரியானா ஐ.ஏ.எஸ்., அதிகாரி அசோக் கேம்கா தெரிவித்துள்ளார். தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது, அரசு அதிகாரிகள் அனைவரும் தாங்கள் மக்களின் பணியாளர்கள் என நினைத்து தங்களின் கடமையை சரியாக செய்தால் 2ஜி ஸ்பெக்ட்ரம் அல்லது நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு போன்ற ஊழல்கள் இருக்காது; ஒவ்வொரு 100 அதிகாரிகளிலும் 10 பேர் தங்களுக்கு வேண்டிய ஆதாயங்களைப் பெறுவதற்காக ஊழலுக்கு துணை நிற்க தயாராக இருப்பார்கள்; அவர்களை நீக்கி விட்டு சரியான அதிகாரிகளை தேர்வு செய்து பணியமர்த்தினாலே ஊழல்கள் நடைபெறாது, அரசு துறைகளில் நிர்வாக சட்டம் போன்றதொரு சட்டம் கொண்டு வரவது மிகவும் அவசியம்; ஏனெனில் நீங்கள் ஒரு நிறுவனத்தில் சேர்ந்து உங்களது பணியை சிறப்பாகவும் சரியாகவும் செய்தால் நீங்கள் அந்நிறுவனத்தில் இயக்குனர் பதவி வரை உயர முடியும்; அதே சமயம் உங்களது செயல்களில், எண்ணங்களில் தவறு இருந்தால் நிர்வாக சட்டத்தின் கீழான நடவடிக்கையை எதிர்க் கொள்ள வேண்டியதாக இருக்கும்; ஆனால் அரசு துறைகளில் அத்தகையதொரு சட்டம் கிடையாது என அவர் தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதோராவின் நில ஒப்பந்த விவகாரத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக அறிக்கை தாக்கல் மத்திய அரசுக்கு எதிராக பெரும் புயலை கிளப்பியவர் இந்த அசோக் கேம்கா என்பது குறிப்பிடத்தக்கது. 

by Swathi   on 15 Aug 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.