LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

சர்வதேச கராத்தே போட்டியில் தங்கப்பதக்கம்: இலக்கியாவிற்கு எஸ்ஆர்எம் சார்பில் ரூ.3 லட்சம் பரிசு- பாரிவேந்தர் அறிவிப்பு!

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இலக்கியாவிற்கு எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் சார்பில் ரூ.3 லட்சம் பரிசு வழங்கப்படும் என பாரிவேந்தர் தெரிவித்து உள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம் பிலிமிசை கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவர் சென்னை கோடம்பாக்கத்தில் குடும்பத்துடன் தங்கி, கோயம்பேடு சந்தையில் சுமை தூக்கும் கூலி வேலை செய்து வருகிறார்.

இவருடைய 14 வயதுடைய மகள் இலக்கியா தனியார் பள்ளி ஒன்றில் 7ம் வகுப்பு பயின்று வருகிறார். சிறுவயது முதலே கராத்தே மீது அதிக ஈடுபாடு கொண்ட  இலக்கியா, கடந்த 4 ஆண்டுகளாக கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் அண்மையில், மலேசியாவில் நடைபெற்ற, சர்வதேச கராத்தே ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில், 19 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில், இந்தியா சார்பாக மொத்தம் 21 பேர் பங்கேற்றனர்.

தமிழகத்தை சேர்ந்த 4 பேரில் மாணவி இலக்கியாவும் ஒருவர். மொத்தம் 8 நாடுகள் பங்கேற்ற போட்டியில், பல சுற்றுகளில் வெற்றி பெற்று, இறுதி போட்டிகளில் இலக்கியா, 2 தங்கப்பதக்கங்களை வென்று சாதனை புரிந்து உள்ளார்.

மாணவி இலக்கியாவிற்கு எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் சார்பில் ரூ.3 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று  பாரிவேந்தர் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் கூறி இருப்பதாவது:
பெரம்பலூர் மாவட்டம் பிலிமிசை கிராமத்தை சேர்ந்த மாணவி இலக்கியா தங்கப்பதக்கம் பெற்றதற்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  

மாணவி இலக்கியா எதிர்காலத்தில் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு சாதனை படைக்க விரும்பினால் அதற்கான உதவிகளும் செய்துதரப்படும்.


இவ்வாறு பாரிவேந்தர் அறிக்கையில் கூறியுள்ளார்.

by Mani Bharathi   on 18 Jul 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.