வெள்ளக்கார துரை படத்தை தொடர்ந்து விக்ரம் பிரபு, ஏ.எல். விஜய் இயக்கத்தில் ‘இது என்ன மாயம்’ படத்திலும், ஜி.என்.ஆர். குமரவேலன் இயக்கத்தில் ‘வாகா’ படத்திலும் நடித்து வருகிறார்.
இவ்விரு படங்களும் தற்போது முடியும் தருவாயில் இருப்பதால், இப்படத்தை தொடர்ந்து, மஞ்சப்பை படத்தை இயக்கிய ராகவன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறாராம் விக்ரம் பிரபு.
பொழுதுபோக்கு படமாக உருவாக இருக்கும் இப்படத்தில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக முன்னணி கதாநாயகிகளை நடிக்க வைக்க ஆலோசனை செய்து வருகிறார்களாம். இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்க இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
|