LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

இணையத்தில் வாழும் முத்தமிழ் !

இறைவா !

எத்தனை கோடி இன்பம்

வைத்தாய் இணை(த)யத்திலே !

இறைவா நீயும் இப்போதே

இறங்கி வரவேண்டும்

இணையத்திலே

மூன்று தமிழிலே 

ஆடிப்பாடி மகிழ வேண்டும் !

 

கருவிலே இருக்கும் குழந்தையும்

குருவின் துணை இல்லாமலே

இணையம் என்னும் ஏட்டில்

திருவாசகம் நன்கு படிக்கும் !

 

பக்கத்தில் இணையம் இருந்தால்

பாலைவனத்தில் கூட நீ

முத்தமிழில் விளையாடலாம் !

 

ஒளவை வழங்கிய ஆத்திச்சூடி

ஆழ்வார்கள் பாடிய பாசுரங்கள்

கம்பன் படைத்த ராமாயணம்

கண்ணன் போதித்த கீதை

திருக்குறள் தேவாரம் திருவருட்பா

உருக்கமான நூல்களைத்தேடி

அன்று நூலகம் சென்றோம்

இன்று இணையதளம் சென்று

படித்து மகிழ்கிறோம் !

 

அன்று

தனிமையை விரட்ட

மனிதனிடமே பேசினோம்

இன்று

இணையத்தில் இணைந்து

இரண்டறக் கலந்து பேசி

இன்பமாக மகிழ்கிறோம் !

 

அன்று

தமிழோசை உலகெல்லாம்

பரவ வேண்டும்  

பாரதி கண்ட கனவு

இன்று

இணையத்தில் நனவாகி

கண்டு மகிழ்கிறோம் !

 

பூ. சுப்ரமணியன்,

பள்ளிக்கரணை, சென்னை

 

 

 

 

              

 

 

 

 

 

 

by Subramanian   on 16 Jul 2017  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.