கடந்த சில வருடங்களாக சர்வதேச பொருளாதாரத்தில் நிலவி வந்த மந்த நிலை, இனி வரும் ஆண்டுகளில் இருக்காது என ஐக்கிய நாடுகள் சபை கணித்துள்ளது. இதற்கான அறிகுறிகள் இந்தாண்டே தெரியத் தொடங்கி விட்டதாக கூறியுள்ள ஐக்கிய நாடுகள் சபை அடுத்த இரு ஆண்டுகளில் சராசரியாக, சர்வதேச பொருளாதாரத்தில் 3 சதவீத வளர்ச்சி இருக்கும் என்றும் கூறியுள்ளது.
வல்லரசு நாடான அமெரிக்க மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பியுள்ளது என்றும், யூரோ நாணயத்தை பயன்படுத்தும் நாடுகள் சிக்கலில் இருந்து மீண்டுள்ளன என்றும் ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. இந்தியாவும், சீனாவும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மிதமான வளர்ச்சி காணும் என்றும் ஐ.நா கணித்துள்ளது. இப்போதைக்கு வளர்ச்சிக்கான அறிகுறிகள் இருந்தாலும் இதை சிதைக்கக்கூடிய காரணிகள் பலவும் இருப்பதாக ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது.
|