|
|||||
தகவல் அறியும் உரிமை சட்டம் - சென்னை உயர் நீதி மன்றம் வித்தியாசமான தீர்ப்பு |
|||||
தகவல் அறியும் உரிமை சட்டம் - சென்னை உயர் நீதி மன்றம் வித்தியாசமான தீர்ப்பு
வெளிப்படையான, விரைவான, இலஞ்ச ஊழலற்ற அரசு நிருவாகத்தை ஏற்படுத்த கொண்டு வரப்பட்ட சட்டம்தான் தகவல் பெறும் உரிமைச் சட்டம்-2005. பல போராட்டங்களுக்கு பிறகு நிறைவேற்றப்பட்ட இச்சட்டத்தை முடமாக்கும் வேலையை அரசு அலுவலர்களும், தகவல் ஆணையமும், நீதிமன்றங்கலும் செய்வது அடித்தட்டு மக்களின் உரிமையை பறிக்கும் செயலாகும்.
சென்னை கே.கே. நகரைச் சேர்ந்த இளங்கோவும், அரும்பாக்கத்தைச் சேர்ந்த வெங்கடேசும் சென்னை உயர் நீதிமன்றத்தின் பொது தகவல் அலுவலரிடம் தகவல் கேட்டு உள்ளனர். அதாவது சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதி மன்றங்களில் எத்தனை நீதிபதிகள் உள்ளனர். ஊழியர்கள் எத்தனை பேர் உள்ளனர். நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களுக்கு எதிராக எத்தனை ஊழல் புகார்கள் வந்துள்ளது அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என தகவல் கேட்டுள்ளனர். உயர் நீதிமன்றம் தகவல் தர மறுக்கவே மாநில தகவல் ஆணையத்தை அனுகியுள்ளனர் மனுதாரர்கள். ஆணையம் 15 தினங்களுக்குள் தகவல் தர சென்னை உயர் நீதிமன்ற பொது தகவல் அலுவலருக்கு உத்தரவிட்டுள்ளது. தகவல் தர வேண்டிய சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் சென்னை உயர் நீதிமன்றத்திலேயே தகவல் ஆணையத்தின் உத்தரவுக்கு தடை வாங்கியுள்ளார். உயர் நீதிமன்றமே தன் மீதான வழக்கை விசாரித்து தனக்கு சாதகமான தீர்ப்பை கொடுத்துள்ளது வியப்பாக உள்ளது. இத்தீர்ப்பை முன்மாதிரியாக கொண்டு இனி அரசு துறைகள் பலவும் தனக்கு எதிரான தகவல் ஆணையத்தின் தீர்ப்புக்கு தடை வாங்கும் அவலம் ஏற்படும் சூழல் உள்ளது. மனுதாரர் கேட்டுள்ளது அரசு நிருவாகத்தின் சாதாரண அடிப்படை விசயங்களை பற்றியது. இதற்கு பதில் கொடுத்தால் பல ஊழல் புகார்கள் வெளிவந்துவிடும் என்ற பயம்தான் காரணம்
எனவே இச்சட்டத்தின் நோக்கத்தை கருத்தில் கொண்டு அரசு இயந்திரம் செயல்படவேண்டும். வெளிப்படையான, விரைவான, இலஞ்ச ஊழலற்ற நிருவாகத்திற்கு தகவல் ஆணையமும், நீதிமன்றங்களும் உறுதுணையாக இருக்க வேண்டும் |
|||||
by Swathi on 02 Aug 2012 2 Comments | |||||
கருத்துகள் | ||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|