மும்பை, ஆக.8:
கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிர்வாகம் அதன் ஊழியர்களுக்கு நீண்ட காலமாக சம்பளம் தராததைத் தொடர்ந்து ஏர்லைன்ஸ் ஊழியர்கள் புதன்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். நிர்வாகத்தின் குறிப்பிட்ட பிரிவு ஊழியர்கள், விமான பைலட்டுகள், மற்றும் பொறியியாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தில்லி மற்றும் மும்பையில் 31 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டது. கடந்த 1 ஆண்டாக கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிர்வாகம் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. அந்நிர்வாகத்தின் ஊழியர்களுக்கு கடந்த 5 மாதங்களாக சம்பளம் தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதனை தொடர்ந்து "எங்களது வேலை நிறுத்தம் நாடாளுமன்றத்தின் கவனத்தை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கிறோம்' என்றும் ஊழியர்கள் தெரிவித்தனர்.
|