புதுடெல்லி : டெல்லியில் அன்னா ஹசாரே குழுவினர் நேற்று நடத்திய போராட்டத்தை குழுவில் ஒருவரான கிரண் பேடி புறக்கணித்தார். நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேட்டை கண்டித்து டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் பா.ஜ.க தலைவர் கட்கரி ஆகியோர் வீடு முன் அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் அன்னா குழுவினர் நேற்று முற்றுகை போராட்டம் அறிவித்தனர். ஆனால், பா.ஜ.க வையும் குற்றம் சாட்டுவது ஆட்சியில் இருப்போருக்கு சாதகமாகும் என்று கூறிய குழுவின் மற்றொரு உறுப்பிர் கிரண் பேடி நேற்றைய போராட்டத்தை புறக்கணித்தார். கேஜ்ரிவால், பிரசாந்த் பூஷண் ஆகியோர் அழைத்தும் கிரண் பேடி போராட்டத்தில் கலந்து கொள்ளாதது குழுவின் உறுப்பினர்களுக்கிடையே உள்ள கருத்து வேறுபாட்டை தெளிவாக்குகிறது.
|